2 மாதமாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
நாமக்கல், ஜூன் 28- ராசிபுரம் அருகே கடந்த 2 மாத காலமாக குடிநீர் வழங் காததை கண்டித்து, காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பட்ட ணம் பேரூராட்சி, 8 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இந்நிலையில், கடந்த 2 மாத காலமாக அப்பகு திக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகி றது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை பேரூ ராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், முறையான நடவ டிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஆவேச மடைந்த அப்பகுதி பெண்கள் வெள்ளியன்று காலிக்குடங்களுடன் ராசிபுரம் - புதுப்பட்டி சாலை யில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவ லறிந்து வந்த ராசிபுரம் காவல் துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை யடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதுகுறித்து பேரூ ராட்சி செயல் அலுவலர்களிடம் கேட்டபோது, குடிநீர் மோட்டார் பழுதானதால் குடிநீர் வழங்கவில்லை என வும், வேறு மோட்டாரை வரவழைத்து தண்ணீர் வழங்க பட்டு வருவதாக தெரிவித்தார்.