tamilnadu

img

உதகை படகுப் போட்டி: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

உதகை படகுப் போட்டி: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

உதகை, மே 13- உதகையில் கோடை விழாவின் ஒரு  நிகழ்வாக படகு இல்லத்தில் நடை பெற்ற படகுப்போட்டியை மாவட்ட ஆட்சி யர் துவக்கி வைத்து, போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சுற்று லாப் பயணிகளுக்கு பரிசுகளை வழங் கினார். மலைகளின் அரசி என்றழைக்கப் படும் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீச னுக்காக வருகை புரியும் சுற்றுலாப் பய ணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சி யாக கோத்தகிரி நேரு பூங்காவில் காய் கறி கண்காட்சியுடன் கோடை நிகழ்ச்சி யானது துவங்கி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி மற்றும் உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20 ஆவது ரோஜா கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன இந்நிலையில் கோடை விழாவின் ஒரு நிகழ்வாக சுற்றுலாத்துறை மற்றும்  மாவட்ட நிர்வாகம் சார்பில் செவ்வா யன்று உதகை படகு இல்லத்தில் படகுப்  போட்டிகள் நடைப்பெற்றது. இதில் நீல கிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் என்.எஸ் நிஷா ஆகி யோர் கலந்து கொண்டனர். பின்னர் படகுப் போட்டிகளை மாவட்ட ஆட்சி யர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இப்போட்டியில் ஆண்கள் மற்றும்  பெண்களுக்கான படகுப் போட்டிகளும்,  புதுமண தம்பதியினர், பத்திரிக்கையா ளர்களுக்கான படகுப் போட்டிகளும், அதேப்போல் படகு இல்லத்தில் பணிபுரி யும் ஊழியர்களுக்கான படகுப் போட்டி கள் என தனித் தனியாக நடைப்பெற் றது. இதனை கோடை விடுமுறைக்கு உதகை படகு இல்லத்திற்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்ததோடு மட்டுமல்லாமல் ஆர்வத் தோடு போட்டிகளில் கலந்து கொண்ட னர். வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட  ஆட்சியர் பரிசுக் கேடயங்களை வழங்கி  கௌரவித்தார்.