புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் சிலை
கோவை, ஜூலை 30- கோவை -அவிநாசி மேம்பாலத்தில், எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட திருவள்ளு வர் சிலை, தற்போது புதுப்பொலிவுடன் மேம்பாலத்தில் மீண் டும் நிறுவப்பட்டது. கோவை-அவிநாசி சாலை மேம்பாலத்தில் கடந்த ஜன.2 ஆம் தேதி எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்து ஏற்பட்டது. அப்போது மீட்பு பணிகளுக்குத் தடையாக இருந்ததால் அங்கி ருந்த 4 அடி திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக அகற்றப் பட்டு, மாநகராட்சி அதிகாரிகள் சிலையை பாதுகாப்பாக எடுத் துச் சென்றனர். பின்னர் சிற்பக் கலைஞர்கள் சிலையைப் புதி தாக புணரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். அந்தப் பணிகள் தற்போது முடிவடைந்ததைத் தொடர்ந்து புதனன்று காலை திருவள்ளுவர் சிலை மீண்டும் அதே இடத்தில் பாது காப்பான முறையில் நிறுவப்பட்டது. மேலும் சிலை அமைந் துள்ள இடம் சுத்தம் செய்து அழகுபடுத்தும் பணிகளும் மேற் கொள்ளப்பட்டன.