tamilnadu

img

ஈரோடு வார்பிங் - சைசிங் தொழிலாளர்களின் அவலம்

ஈரோடு வார்பிங் - சைசிங் தொழிலாளர்களின் அவலம்

“ஆள் பாதி ஆடை பாதி” என்பது பழ மொழி. ஆனால், அந்த ஆடையை உரு வாக்கும் தொழிலாளர்களின் பாதி வாழ்க் கையை இருளில் தள்ளும் அவலம் ஈரோட்டில் தொடர்கிறது. பஞ்சாலைக ளின் நூலை அழகிய ஆடைகளாக மாற் றும் ஜவுளித் தொழிலின் முதுகெலும்பாக விளங்கும் வார்பிங் மற்றும் சைசிங் பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்க ளின் 24 மணி நேர உழைப்பு, மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறும் இவ் வேளையில் இத்தொழிலாளர்களின் உழைப்புச்சுரண்டல் கவலை அளிக்கி றது. நவீன இயந்திரங்களின் வருகையால் பஞ்சாலைகளிலும், விசைத்தறிகளுக்குப் பின் வந்த புதிய தறிகளிலும் 8 மணி நேர வேலை என்பது சாத்தியமாகியுள்ளது. ஆனால், இந்த இரண்டு உற்பத்தி நிலை களுக்கும் பாலமாக விளங்கும் வார்பிங்  மற்றும் சைசிங் பிரிவுகளின் நிலைமை பரி தாபத்திற்குரியது. இங்கு, தொழிலாளர் கள் நாள் முழுவதும், அதாவது 24 மணி  நேரமும் தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். காலை 9 மணிக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள், வார்பிங் பிரிவில் இரு வராகவும், சைசிங் பிரிவில் ஆறு பேர் வரை யும், கொதிகலனைக் கவனிக்கும் பணி யில் ஓரிருவராகவும் நியமிக்கப்படு கின்றனர். கோன் வடிவில் வரும் நூலை வார்பிங் செய்வதற்கு, அதனை உரிய வரிசையில் மரத்தில் மாட்டி, நூல் முனை களை இழுத்து இயந்திரத்தின் பீமில் கட்டு வது வார்பரின் பணி. நவீன இயந்திரங்கள் நூலின் வரிசையில் சிறு பிழை ஏற்பட்டா லும் நின்றுவிடும். அப்போது, பின்பகுதி யில் இருக்கும் தொழிலாளி அறுந்த நூலை எடுத்து வந்து முன்பகுதியில் இருப்பவரி டம் கொடுக்க, அவர் பீமில் அந்த முனை யைத் தேடி இணைத்து மீண்டும் இயந்தி ரத்தை இயக்குகிறார். சுமார் 3 லட்சம் மீட்டர் நீள பாவினை இவ்வாறு ஓட்ட வேண்டி யுள்ளது. இந்த பாவு பின்னர் சைசிங் பிரிவுக்கு வருகிறது. அங்கு, சைசர் இயந்திரத்தின் பின்பகுதியில் பீமைப் பொருத்தி இயக்கு வதும், கொதிகலனைத் தயார் நிலையில் வைத்திருப்பதும் சைசரின் பணி. சைசிங் உதவியாளர்கள் தேவையான பதத்தில் கஞ்சியைக் காய்ச்சி அனுப்ப, இவை  அனைத்தும் இணைந்து செயல்படும் போது, மறுமுனையில் பாவு கஞ்சியை ஏற்றி காய்ந்து வெளிவருகிறது. அதனை  முக்கிய சைசர், தறிகளுக்குத் தேவையான பீம்களில் சரியாகச் சுற்றி இயக்குகிறார். ஒரு நாளில் 60 முதல் 80 ஆயிரம் மீட்டர் பாவு வரை தயாராகிறது. இந்த வேலை யின் இடையே தொழிலாளர்களுக்கு ஓய் வெடுக்கக் கூட நேரம் கிடைப்பதில்லை. இப்பணி முடிவதற்குள் மறுநாள் விடிந்து விடுகிறது. முதல் நாள் காலை பணிக்கு வருபவர்கள் மதிய உணவுடன் வர, இரவு உணவை நிர்வாகம் அளிக்கிறது. போதுமான ஆட்கள் இருந்தால், உணவு இடைவேளையின்போது சிறிது ஓய்வு  கிடைக்கலாம். ஆனால், பல ஆலைகளில் தேவையான தொழிலாளர்கள் இல்லாத தால், அவர்களுக்கு கழிவறைக்குச் செல் லக்கூட நேரமின்றி, தொடர்ந்து 24 மணி  நேரம் வேலை செய்ய வேண்டிய துர்பாக் கிய நிலை உள்ளது. நூற்றாண்டுகளைக் கடந்து மே  தினக் கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில்  முதன் முதலில் மே தினம் கொண்டா டப்பட்டது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. ஆனால், ஈரோட்டின் வார்பிங் மற்றும் சைசிங் தொழிலாளர்களுக்கு அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க முடி யாத அவலம் இன்னும் நீடிக்கிறது. தங்க ளின் உழைப்பால் உலகிற்கு ஆடைகளை வழங்கும் இத்தொழிலாளர்களின் கண் ணீர் கதைகளுக்கு இம்மேதினம் முடிவுரை எழுதட்டும் -சக்திவேல்