tamilnadu

img

அங்கன்வாடி மையத்திற்கு தேவையான உபகரணங்களை சுமந்து செல்லும் பணியாளர்கள்: வாகன ஏற்பாடு செய்து தர கோரிக்கை

அங்கன்வாடி மையத்திற்கு தேவையான உபகரணங்களை சுமந்து செல்லும் பணியாளர்கள்: வாகன ஏற்பாடு செய்து தர கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில், ஆட்சி யர் வளாகத்தை மையமாக கொண்டு செயல்படும் அலுவ லகத்திற்கு கீழ் மாவட்டம் முழுவதும் 15 மற்றும் திருச்செங்கோடு மையமாக நக ராட்சியில் ஒன்று என மாவட்டம் முழுவதும் 16  மையங்களின் குழந்தை வளர்ச்சி திட்ட அலு வலகங்கள் செயல்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு கல்வி மற்றும் விளையாட் டுத் திறன், உடல் திறன் மேம்படுத்திட அரசு சார்பில் தமிழகம் முழுவதும் கிராமம் மற்றும் பேரூராட்சிகளில் குழந்தைகள் நல அங்கன் வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 1559 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இம் மையங்களின் 1200க்கும் மேற்பட்ட பணியா ளர் மற்றும் சமையலர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். 600க்கும் மேற்பட்ட காலிப்பணி யிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி நிரந்தம் செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் தலைமை இடமாக குழந்தை வளர்ச்சித் திட்ட அலு வலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் கீழ் கிராமங்களிலுள்ள அனைத்து ஊராட்சி களுக்கும், ஒன்றிய அலுவலகத்திலிருந்து அனைத்து உபகரணங்களும் வழங்கப்படுகி றது. அங்கன்வாடியிலுள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஒன்றிய தலைமை அலுவலகத்தில் வழங்குவதால், மையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் ஒன்றிய அலுவலகங்களுக்கு சென்று பொருட் களை பெற்று, அதனை மையங்களுக்கு கொண்டு வருவதில் பெரும் சிரமத்தை சந் தித்து வருகின்றனர். மேலும், பாலிதீன் சாக்கு பையில் போட்டு கொடுப்பதால், அரசு மற் றும் தனியார் பேருந்துகளில் ஏற்றிச் செல்ல  முடியாத நிலை ஏற்படுகிறது. ஒரு சில பெண் கள் தங்களது சொந்த வாகனத்தை பயன் படுத்த வேண்டிய நிலை உள்ளது. வாகனம் ஓட்ட முடியாத நிலையில், பேருந்தை நம்பியே பல மணி நேரம் பேருந்து நிறுத்தங்களில் நின்று, நடத்துநர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டு, மையங்களுக்கு உபகரணங்களை கொண்டு செல்கின்றனர். மேலும், இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் பணியாளர்களுக்கு எரிபொருள் செலவும் கூடுதலாக ஏற்படுகிறது. தற்பொழுது மாவட்டத்தில் விளையாட்டு உபகரண பொருட் கள் வழங்கிக் கொண்டுள்ளனர். இதனை ஒன்றியங்களுக்கு சென்று பெற்று வரும் பணியாளர்களின் நிலையை மாவட்ட ஆட்சி யர் மற்றும் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் சத் தான உணவு பொருட்கள் அடங்கிய பெட்ட கம் வழங்குகின்றனர். அதையும் நேரடியாக சென்று தான் பெற்று வரவேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்டச் செயலாளர் பிரேமா கூறுகையில், மாவட்டம் முழுவதும் 1559 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஒன்றிய தலைமை அலுவலகம் மூலம் வழங்கும் விளை யாட்டு பொருட்கள், கர்ப்பிணிகள் மற்றும் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகம் ஆகிய வற்றை, அங்கன்வாடி பணியாளர்கள் நேரடி யாக சென்று பெற்று அதனை மையங்க ளுக்கு கொண்டு செல்வதில் பெரும் சிர மத்தை சந்தித்து வருகின்றனர். ஒரு பணி யாளர் இரண்டு மையங்களில் வேலை செய்வதால், இரண்டு மூட்டை தூக்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் பேருந்துகளில் இதுபோன்ற பொருட்களை ஏற்றாமல் அலைக்கழிக்கும் நிலையும் ஏற் பட்டு வருகிறது. இருசக்கர வாகனத்தில் சென்று பெற்று வருபவர்களுக்கு எரிபொ ருள் செலவு கூடுதலாகி வருகிறது. பல்வேறு சிரமங்களை சந்தித்து பொருட்களை அங்கன் வாடி மையத்திற்கு கொண்டு செல்ல வேண் டிய நிலை உள்ளது. எனவே, அரசு உரிய கவனம் செலுத்தி அங்கன்வாடி மையங்களுக்கு உணவு பொருட்கள் கொண்டு வரும் வாகனத்தை பயன்படுத்துவதை போல், இதற்கான ஒரு  வாகனத்தை பயன்படுத்தி மாவட்டம் முழுவ தும் உள்ள அனைத்து மையங்களுக்கு நேரடி யாக வாகனம் மூலம் விநியோகம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். -எம்.பிரபாகரன்