வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக வெள்ளி யன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை, மேட்டுப்பாளையத்தில் ஐக்கிய ஜமா அத் பேரவை மற்றும் அனைத்து பள்ளி நிர்வாகிகள் இணைந்து, ஒன்றிய அரசு அண் மையில் கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் 26 பள்ளி வாசல்களிலும் கருப்புக்கொடி கட்டி தங்களின் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தனர். இதில் ஐக்கிய ஜமா அத் பேரவை தலைவர் முகமது செரீப், செயலா ளர் அக்பர் அலி உள்ளிட்ட அனைத்து இஸ் லாமிய கூட்டமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர். ஈரோடு இதேபோன்று ஈரோடு மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் முன்பு இசுலாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு, பெரி யார் வீதியில் உள்ள ஜாமியா பள்ளிவாசல் முன்பு மாவட்ட தலைமை காஜி முகம்மது கிஃபாயத்துல்லா தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. நகர பள்ளியின் முத்த வல்லி கே.ஏ.எஸ்.கே.உசேன் அலி, அல் அமீன் முன்னாள் மாணவர்கள் சங்க தலை வர் டாக்டர் அப்துல்லா, முகம்மது சுஜாத் உட்பட பலர் கருப்பு பட்டை அணிந்து பங் கேற்றனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மசூதி முன்பு இஸ்லாமியர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏப்.13 ஆம் தேதி நாமக்கல் பூங்கா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்
ஒரே நாளில் வெறிநாய் கடித்து 16 பேர் காயம்
எடப்பாடி பகுதியில் ஒரே நாளில் 16க்கும் மேற்பட்டோர் வெறிநாய் கடித்து காயம டைந்துள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி பகுதிகளில் அண்மைக்காலமாக தெருநாய் களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந் நிலையில், புதனன்று மாலை எடப்பாடி நக ராட்சி பூலாம்பட்டி சாலை அருகே உள்ள க.புதூர் பகுதியில் சுற்றித்திரிந்த நாய்களில் சில திடீரென வெறிபிடித்தது போல அவ்வழி யாக நடந்துசென்ற பொதுமக்களை விரட்டி கடித்துக் குதறின. இதில் படுகாயமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி ராஜா ராம் (60), கூலித் தொழிலாளி குஞ்சப்பன் (75), க.புதூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (40) உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் எடப் பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்ட டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
.