புகாரளிக்க வந்தவரிடம் பணம் பறித்த காவல் அதிகாரி
சேலம், ஜூலை 6- கடன் பெற்று ஏமாற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய் யக்கோரி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத் திற்கு வந்த நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டியைச் சேர்ந்த முரளி என்பவர், புதிய பேருந்து நிலையம் அருகே 15 ஆண்டுக ளாக நகைக்கடை வைத்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த தமிழழ கன் மற்றும் அவரது குடும்பத்தினரான பிரேமா, விக்னேஷ்வர் ஆகியோார், தங்களுக்கு சொந்தமான சொத்து பத்திரத்தை 2022 ஆம் ஆண்டு முரளியின் நிறுவனத்தின் பெயரில் அடமா னம் வைத்து ரூ.1.21 கோடி கடன் பெற்றுள்ளனர். இதனிடையே பணத்தை திருப்பித்தராமல் தமிழழகன் குடும்பத்தினர் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு சேலம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் முரளி வழக்கு தாக்கல் செய்தார். அதன்பிறகு சட்டநடவடிக்கை மேற் கொள்வதற்கான நீதிமன்ற ஆணையைப் பெற்று, சேலம் மாந கர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்க சென்ற முர ளியிடம், சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன், பணத்தை பெற்று தருவதாக கட்டப்பஞ்சாயத்து செய்ததாகக் கூறப்படு கிறது. அதன்பிறகு, கடந்த பிப்ரவரி மாதம் தமிழழகனி டமிருந்து ரூ.25 லட்சத்தை பெற்று முரளியிடம் வழங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணன், அதற்காக ரூ.6 லட்சம் பணத்தை முரளியிடமிருந்து பெற்றுள்ளார். இது குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முரளி புகாரளித்துள்ளார். இதனிடையே, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணத்தை பெற்று செல்லும் கண்காணிப்பு காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அவரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அவிநபு உத்தரவிட்டுள் ளார்.