tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஆம்னி கார் தீப்பிடித்து சேதம்

கோவை, மார்ச் 28– கோவை காந்திபுரம் அருகே, பொருட்களை டெலிவரி செய்யும் ஆம்னி  கார் ஒன்று திடீரென தீப் பிடித்து எரிந்தது. இந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. ஃப்ரீலான்சிங் முறை யில் செயல்பட்டு வந்த இந்த ஆம்னி கார், பல்வேறு கடைகளுக்கு பொருட் களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.  நீண்ட தூர பயணத்தை முடித்துவிட்டு ஆம்னி காரை  சித்தாபுதூர் பகுதியில் ஓட்டுநர் நிறுத்திச் சென்றுள் ளார். பின்னர், காரின் கிளீனர் வண்டியை மீண்டும் இயக்க முயன்றபோது, திடீரென காரில் இருந்து புகை வர ஆரம்பித்தது. உடனடியாக காரை நிறுத்திவிட்டு, கிளீனர்  புகை வந்த இடத்தில் தண்ணீரை ஊற்றினார். அப்போது, தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த கிளீனர், உடனடியாக அருகில் இருந்த கடைகளில் இருந்து தீயணைப்பான்களைக் கொண்டு  வந்து தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால் தீ  குறையவே இல்லை. உடனடியாக கோவை மத்திய தீய ணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தக வல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை  கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், கார் முற்றி லும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்துக்கான கார ணம் குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

பழுதடைந்த வீடுகளை புதுப்பிக்கக்கோரி விசிக முற்றுகை

அவிநாசி அருகே குப்பாண்டம்பாளையம் ஏ.டி. காலனி பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளைப் புதுப்பித்துத் தரக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளியன்று ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். அவிநாசி ஒன்றியம், குப்பாண்டம்பாளையம் ஊராட் சிக்குட்பட்ட ஏ.டி. காலனி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு சார் பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் பழுதடைந்துள்ள தால் அவற்றைச் சீரமைத்துத் தர வேண்டும். மேலும் இப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, உடனடியாக சாக்கடை கால்வாய் அமைத்துத் தர வேண்டும் என்றும், , கலைஞரின் புதிய கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் பழ. சண்முகம் தலைமை யில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய குமார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோரிக்கை கள் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என உறுதிய ளித்தார். இதன்பின்னர் அனைவரும் கலைந்து சென்ற னர். மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தனபாலிடம் இப்பிரச்சினை குறித்து பலமுறை தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை என்றும், தொகுதிப் பக்கமே  வருவதில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.

சிசுவின் பாலினத்தை தெரிவித்தால், குண்டர் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை

சேலம், மார்ச் 28- கருவிலுள்ள குழந்தையின் பாலினம் தெரிவித்தால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக் கப்படும், என சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சட்ட விரோதமாக கருக்கலைப்புகள் நடை பெறாமல் இருக்க மருத்துவத்துறை மற்றும் சமூக நலத் துறை இணைந்து பொதுமக்களுக்கு தொடர் விழிப் புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றன. கருவுற்ற தாய்மார்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை முன்கூட்டியே அறிவதற்கு முயற்சி செய்வதும் அல்லது மருத்து வரால் தெரிவிக்கப்படுவதும் சட்டப்படி தண்டனைக் குரிய குற்றமாகும். எந்தவொரு மருத்துவமனையி லாவது குழந்தையின் பாலினம் கண்டறியப்பட்டது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை அல் லது ஸ்கேன் மையத்தின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படுவதுடன், இந்தச் செயலில் ஈடுபடுவோ ருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.ஒரு  லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும், இதில் தொடர்புடைய மருத்துவரின் மெடிக் கல் கவுன்சில் பதிவு எண் ரத்து செய்யப்பட்டு, இனி வரும் காலங்களில் அந்த மருத்துவர் மருத்துவப் பணி யினை நிரந்தரமாக மேற்கொள்ளாத வகையில் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு இதில் ஈடுபட்டவர்கள் மீது குண் டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடு பட்டதாக அண்மையில் 3 நபர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். பாலினம் கண்டறிதல் தொடர்பான புகார் களை 73581 22042 என்ற கைப்பேசி எண்ணில் தெரி விக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.