டாஸ்மாக் கடைகளை மாற்றுவதாக அதிகாரிகள் உறுதி
சேலத்தில் ஒரே இடத்தில் 5 டாஸ் மாக் கடைகள் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிபிஎம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலை யில், வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 3 கடைகளை மாற்ற நடவடிக்கை எடுப் பதாக அதிகாரிகள் உறுதியளித்த னர். சேலம் புதிய பேருந்து நிலையத் திலிருந்து மெய்யனூர் செல்லும் சாலையில் 200 மீட்டர் தொலைவுக்கு அடுத்தடுத்து 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அங்கு மது குடிக்க வருபவர்களால் போக்குவரத்து இடையூறு, விபத்து மேலும், அரை நிர்வாணத்துடன் சுற்றுவதால் பெண்கள், குழந்தைக ளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி யுள்ளது. இப்பிரச்னைகளுக்கு முற் றுப்புள்ளி வைக்க, டாஸ்மாக் கடை களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி மார்ச் 30 ஆம் தேதியன்று சிபிஎம் வடக்கு மாநகரக்குழு சார்பில் டாஸ்மாக் கடை முன்பு காத்திருப்புப் போராட் டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது. இந்நிலையில், இதுதொடர் பாக மேற்கு வட்டாட்சியர் அலுவலகத் தில் வெள்ளியன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. வட்டாட்சியர் மனோ கரன், துணை வட்டாட்சியர் கீர்த்திவா சன், சிபிஎம் வடக்கு மாநகரச் செய லாளர் பிரவீன்குமார், மாநகரக்குழு உறுப்பினர்கள் செல்ல பாண்டியன், ராஜேஷ் குமார், சசிகுமார் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, உடனடியாக 3 கடைகளை ஏப்.1 ஆம் தேதிக்குள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் உறு தியளித்தனர்.