உறக்கத்தில் நீலகிரி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்!
உதகை, ஏப்.28- கடும் வெயிலில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் யாசகம் பெருவது அதிகரித்துள்ள நிலையில், நீலகிரி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் உறக்கத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், சமவெளிப் பகுதிகளில் இருந்து வந்துள்ள சில பெண்கள், பச்சிளம் குழந்தை களுடன் உதகை நகரின் முக்கிய இடங்களான ஏ.டி.சி. பேருந்து நிலையம், சந்தை மற்றும் சுற்றுலாப் பயணி கள் அதிகம் கூடும் பகுதிகளில் யாசகம் எடுத்து வரு வது வேதனை அளிக்கிறது. பிறந்து சில வாரங்களே ஆன பத்துக்கும் மேற்பட்ட கைக்குழந்தைகளைத் தாய்மார் கள் கடும் வெயிலில் தூக்கிச் செல்வது காண்போரை கதி கலங்க வைக்கிறது. மாநில அரசு குழந்தைகள் பாதுகாப் பிற்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வரும் நிலையில், உதகையில் இத்தகைய அவல நிலை நீடிப்பது அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. எனவே, மெத்தனமாக செயல்படும் அதிகாரி கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் மற்றும் குழந்தைகள் பாது காப்பு அமைப்பினர் உடனடியாக தலையிட்டு இப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கல்
நாமக்கல், ஏப்.28- கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி மாணவர்க ளுக்கு திங்களன்று பணி நியமன ஆணை வழங்கப் பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் செயல் பட்டு வரும் கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் திங்க ளன்று கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் மு.வெங்கடேசன் தலைமை வகித்தார். துணை முதல்வர் நந்தகுமார் வரவேற்றார். கல்லூரியின் தலைவர் சீனிவாசன் வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். இவ்விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனமான குளோபல் நலெட்ஜ் டெக் னாலஜி நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் செந்தில் குமார் கலந்து கொண்டு, ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட் சம் வரையிலான ஊதியத்தில் தேர்வான 6 மாணவ, மாண வியருக்கு பணி நியமன ஆணையையும் மற்றும் பயிற்சிக்கு தேர்வான 10 மாணவ, மாணவியருக்கு நிய மன ஆணையும் வழங்கினார். முடிவில், கல்லூரியின் பெருநிறுவன தொடர்பு இயக்குநர் முருகேசன் நன்றி கூறினார்.
ஹஜ் யாத்திரிகர்களுக்கான தடுப்பூசி முகாம்
கோவை, ஏப்.28– கோவை மாவட்டத்தில் இருந்து ஹஜ் புனித யாத் திரை செல்பவர்களுக்கான தடுப்பூசி முகாம் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் திங்களன்று நடை பெற்றது. ஒன்றிய, மாநில அரசுகளின் ஹஜ் கமிட்டி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்தி ரையை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ஹஜ் பயணத்தின் போது பாதுகாப்பு மற் றும் நெரிசலில் சிக்குவதை தவிர்க்கும் வகையில் ஹஜ் பயணத்தில் குழந்தைகளுக்கு அனுமதியில்லை என சவூதி அரேபியா அறிவித்துள்ளது. ஹஜ் பயணிக ளுக்கு விமான கட்டணம் உள்ளிட்ட போக்குவரத்து செலவு, தங்கும் விடுதி கட்டணம். உணவுக்கான செலவு என சுமார் ரூ.3.75 லட்சம் செலவாகிறது. இதனால், அரசு சார்பில் சலுகை மற்றும் மானியமும் வழங்கப்படுகி றது. நடப்பாண்டில், கோவை மாவட்டத்தில் இருந்து ஆண்கள், பெண்கள் உள்பட பலர் ஹஜ் புனித பய ணம் மேற்கொள்ள தயாராகி உள்ளனர். இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஹஜ் பய ணம் மேற்கொள்பவர்களுக்கு ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் தடுப் பூசி முகாம் மற்றும் சொட்டு மருந்து சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாள் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
கர்ப்பிணி யானை உயிரிழப்பு
உதகை, ஏப்.28- கோத்தகிரியில் தனியார் தேயிலை தோட்டத்தில் கர்ப்பிணி யானை உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படு கிறது. சம வெளிப்பகுதிகளில் நிலவும் கடும் வெயில் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மலை மாவட்டமான நீலகிரியை நோக்கி காட்டுயானைகள் படையெடுத்து வருகின் றன. இந்நிலையில், ஞாயிறன்று கோத்தகிரி அருகே கூட்டாடா தனியார் தேயிலை தோட்டத்தில் பெண் யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பெண் யானையின் உடலை பார்வையிட்டனர். அப்போது உயி ரிழந்தது 25 வயதுடைய பெண் யானை என்றும், கர்ப்ப மாக இருந்தும் தெரியவந்தது. மேலும், இதுதொடர் பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றர். பிரேத பரி சோதனை செய்யப்பட்ட பிறகு, யானையின் இறப்பு குறித்து தெரியவரும் என வனத்துறையினர் தெரி வித்துள்ளனர்.