மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த குழந்தைகளின் கண்களை தானம் வழங்கி அவர்களது தந்தை நெகிழ வைத்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுபாளையம் நடூர் பகுதியில் துணிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டின் சுற்று சுவர் இடிந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் செல்வராஜ் என்ற டீக்கடை தொழிலாளரின் கல்லூரி படிக்கும் மகள் நிவேதா, 10-ம் வகுப்பு படிக்கும் மகன் ரங்கநாதன் ஆகியோரும் உயிரிழந்தனர். செல்வராஜின் மனைவி லட்சுமி பல ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்து விட்ட நிலையில் இரு குழந்தைகளையும் மனைவியின் தங்கையான சிவகாமி வளர்த்து வந்துள்ளார்.
செல்வராஜின் வீடு விபத்து நடந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நிவேதாவும், ரங்கநாதனும் சித்தி சிவகாமி வீட்டில் தூங்கிய நிலையில் கருங்கல் சுற்றுசுவர் சாய்ந்து இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் மகன் மற்றும் மகள் ஆகிய இருவரின் கண்களையும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தானம் வழங்கியதாக செய்தியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.