tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நினைவு தினம் கடைப்பிடிப்பு

ஊத்துக்குளியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னாள் மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன் 13ஆவது  ஆண்டு நினைவு தினம் வியாழனன்று கடைப்பிடிக்கப்பட் டது.  ஊத்துக்குளி தாலுகா குழு அலுவலகத்தில் அவரது உரு வப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு ஆர்.குமார் பங்கேற்று என்.வரதராஜ னின் பணிகளை நினைவு கூர்ந்து பேசினார். தாலுகா குழு  உறுப்பினர்கள் சக்திவேல், மணியன் மற்றும் ஆர்.எஸ் கிளை  வி.கே.பழனிச்சாமி, ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்ட னர்.

இறைச்சி விற்பனை செய்த  15 கடைகளுக்கு அபராதம்

திருப்பூர், ஏப்.10 - மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சி விற்பனை செய்த 15  கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, 500 கிலோ இறைச்சி  பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை யொட்டி, இறைச்சி கடைகளை திறந்து விற்பனை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை  விதித்திருந்தது. இந்நிலையில், திருப்பூர் கொங்கு மெயின்  ரோடு, 60 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில்  சுகாதாரத்துறை யினர் ஆய்வு செய்து இறைச்சி விற்பனை செய்த 15 க்கும்  மேற்பட்ட கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட் டது. 500 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு பினாயில்  ஊற்றி அழிக்கப்பட்டது.

க்கடையில் சாயக்கழிவு நீர் பட்டன் ஜிப் நிறுவனங்கள் மூடல்

திருப்பூர், ஏப்.10 - சாக்கடை கால்வாயில் சாயக் கழிவுநீர் ஓடியதை அடுத்து  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் திருப்பூர் புதிய பேருந்து நிலை யம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில்  முறைகேடாக இயங் கிய ஸ்கிரீன் பிரிண்டிங் மற்றும் பட்டன் ஜிப்  சாய ஆலைகள்  கண்டறியப்பட்டன. திருப்பூர் பி.என்.சாலை பிச்சம்பாளையம் பேருந்து நிறுத் தம் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் சாயக் கழிவுநீர்  கலந்து ஓடியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள்  மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்தனர். இதைய டுத்து அலுவலர்கள் அங்கு ஆய்வு  மேற்கொண்டனர். அதில்  சக்தி தியேட்டர் பகுதியில் அனுமதி இல்லாமல் 4 ஸ்கிரீன்  பிரிண்டிங் நிறுவனங்கள் மற்றும் பட்டன் ஜிப் சாயஆலை  நிறுவனம் செயல்பட்டது கண்டறியப்பட்டது. முறைகேடாக  இயங்கிய நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட் டது.

விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை: விரைந்து  நடத்தி தீர்வு காணக் கோரி இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்

சட்டப் பாதுகாப்புடன் விசைத்தறி நெச வுக் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு  செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்க ளின் கூட்டமைப்பை சேர்ந்தோர் சோமனூ ரில் வெள்ளிக்கிழமை முதல் தொடர் உண் ணாவிரதப் போராட்டத்தை நடத்துகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு கூலிக்கு நெசவு  செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக் கும், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் இடையே கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.  எனினும் சில மாதங்களிலேயே ஒப்பந்தக்  கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைத்து வழங்கினர். அதன்பிறகு பல கட்டப்  போராட்டங்கள் நடத்தியும் கூலியை உயர்த்தி  வழங்கவில்லை. இந்நிலையில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றுக்கு ஏற்ப,  பழைய கூலி உயர்வுடன், புதியகூலி உயர்வை வழங்க வேண்டும் என கூலிக்கு  நெசவு செய்யும்விசைத்தறியாளர்கள் வலியு றுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த மாதம் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு  செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங் கங்களின் கூட்டமைப்பு காலவரையற்ற  வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி னர். இப்போராட்டத்தைத் தொடர்ந்து  கோவை மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் துறையினர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். எனினும் எவ்வித தீர்வும் காணப் படவில்லை. பிரச்சனையில் முட்டுக்கட்டை நிலை  நீடித்து வருகிறது. எனவே கூலி உயர்வு  கோரிக்கையை வலியுறுத்தியும், ஜவுளி உற் பத்தியாளர்களை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தவும் தமிழக அரசு, மாவட்ட  நிர்வாகத்தை வலியுறுத்தி அடுத்தக்கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல்  தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்து வது என்று தீர்மானித்துள்ளனர். இதன்படி  சோமனூர் கருமத்தம்பட்டி சாலையில் வெள் ளிக்கிழமை முதல் 15ஆம்தேதி செவ்வாய்க்கி ழமை வரை ஐந்து நாட்கள் இந்த தொடர்  உண்ணாவிரதம் நடைபெறுகிறது.இதில்  சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பா ளையம், பெருமாநல்லூர், கண்ணம்பாளை யம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கூலிக்கு  நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் கள் பங்கேற்கின்றனர்.