பக்தர்கள் பாதுகாப்புக்காக கும்கி யானைகள் வரவழைப்பு
கோவை, மே 8- வெள்ளிங்கிரி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாது காப்பை உறுதி செய்யும் பொருட்டு, சின்னத்தம்பி என்ற இரண்டாவது கும்கி யானை வியாழனன்று வரவழைக் கப்பட்டது. கோவை மாவட்டம், வெள்ளிங்கிரி மலைக்கோயிலுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரு கின்றனர். நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலிருந்தும் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலை யில், பூண்டி வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வெளி யேறும் காட்டு யானை ஒன்று, கடந்த சில வாரங்களாக வெள்ளிங்கிரி கோயில் வளாகத்தில் பகல் நேரங்களிலும் புகுந்து கடைகளுக்கு சேதம் விளைவித்து வருகிறது. இதையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், காட்டு யானையை விரட்டும் நோக்கிலும் நரசிம் மன் என்ற கும்கி யானை கடந்த வாரம் வரவழைக்கப்பட்டது. தற்போது, பக்தர்களின் வருகை மே 31ஆம் தேதி வரை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூடுத லாக ஒரு கும்கி யானையை வரவழைக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, சின்னத்தம்பி என்ற கும்கி யானை வெள்ளிங்கிரி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சின்னத்தம்பி யானை, சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு தடாகம் மற்றும் ஆனைக்கட்டி பகுதிகளில் விவசாய நிலங் களை சேதப்படுத்தியதற்காக வனத்துறையினரால் பிடிக்கப் பட்டதாகும். பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டும், சுமார் 100 கிலோமீட்டர் தூரம் சென்று மீண்டும் கோவை பகு திக்கு வந்த யானை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மே மாதம் இறுதி வரை அதிகளவிலான பக்தர் கள் வெள்ளிங்கிரி கோயிலுக்கு வருகை தர இருப்பதால், வனத்துறையினர் தற்போது தீவிர பாதுகாப்பு நடவ டிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம்: மாவட்ட வன அலுவலர் சிறைபிடிப்பு
சேலம், மே 8- மேச்சேரி அருகே சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தய வந்த மாவட்ட வன அலுவலரை அப்பகுதி விவ சாயிகள் சிறைபிடித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப ரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள புதுக்காளி கவுண்டனூரைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவருடைய நாயை இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுத்தை கடித்து சென்றது. இதை யடுத்து டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்குட்பட்ட ராமசாமி மலையில் சிறுத்தை பதுங்கி இருப்பதையும், சிறுத்தையின் கால்தடங்களையும் ஆய்வு செய்த வனத்துறையினர், 6 இடங் களில் கேமராக்களை பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதனன்று அதிகாலை முத்து என்பவருடைய நாயை சிறுத்தை கடித்து இழுத்துச் சென்றது. இதனால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்த னர். இதுகுறித்து தகவலறிந்த மேட்டூர் வட்டாட்சியர் ரமேஷ், சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி மற்றும் வனத்துறை அதிகாரிகள், சிறுத்தை நடமாட்டம் காணப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். டேனிஷ்பேட்டை ரேஞ் சர் தங்கராசு மற்றும் வனத்துறையினர், இரு தினங்களுக்கு முன்பு நாயை சிறுத்தை கடித்த இடத்திற்கு செல்ல புறப்பட்ட னர். அப்போது விவசாயிகள் அதிகாரிகளை சிறைபிடித்து, தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும், வழங்க வேண் டும் என வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட வன அலுவலர் கூறுகையில், சிறுத்தை நடமாட்டம் குறித்து விவசாயிகள் அழைத்தபோது வனத் துறையினர் அலட்சியமாக பேசியது குறித்து ஆதாரங்கள் அளித்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும். மேலும், 2 இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தை யைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
வெல்லம் விலை உயர்வு
நாமக்கல், மே 8- ஏலச் சந்தையில் வெல்லம் விலை உயர்ந்து காணப்பட்ட தால், ஆலை உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டார பகுதி களான ஜேடர்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளை யம், கபிலர்மலை, பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் சாகு படி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்பு களை வெல்ல ஆலை உரிமையாளர்கள் வாங்கி வந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். இதன்பின் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாகக் கட்டி பிலிக்கல்பாளை யம் வெல்லம் ஏலச் சந்தையில் விற்பனை செய்து வருகின்ற னர். இங்கு ஒவ்வொரு வாரமும் சனி, புதன்கிழமைகளில் ஏலம் நடைபெறுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,400 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ரூ.1,340 வரையிலும் ஏலம் போனது. இந்நிலையில், புதனன்ற நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,460 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,540 வரையிலும் ஏலம் போனது. இதனால் ஆலை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.