tamilnadu

img

வேர்களை தேடி :100 அயலக தமிழர்கள் ஆற்காடு கோட்டையை பார்வையிட்டனர்

வேர்களை தேடி :100 அயலக தமிழர்கள்  ஆற்காடு கோட்டையை பார்வையிட்டனர்

ராணிப்பேட்டை, ஆக 14 -  "வேர்களைத் தேடி" திட்டத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை வாயிலாக ஆஸ்திரேலியா, பிஜி, இந்தோனேசியா, ரீயூனியன், மார்டினிக், மொரிசியசு, மலேசியா, தென் ஆப்பிரிக்கா, மியான்மர், குவாடலூப், கனடா, இலங்கை ஜெர்மனி உள்ளிட்ட 13 நாடு களை சேர்ந்த சுமார் 100 அயலக தமிழ் இளை ஞர்கள் புதனன்று (ஆக 13) ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு நகராட்சியில் இந்திய தொல்லியல் துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள ஆற்காடு கோட்டையை பார்வையிட்டு, இவ்விடத்தின் வரலாறு குறித்து அறிந்து கொண்டனர். அயலகத் தமிழர்களின் கலாச்சார உறவு களை மேம்படுத்துவது ஒரு பகுதியாக, பல தலைமுறைகளுக்கு முன்பாக இடம் பெயர்ந்து பல்வேறு பகுதிகளில் வாழும் அயலகத் தமிழர்களின் குழந்தை களுக்காகவும், வெளிநாடு வாழ் தமிழர்க ளுக்கு, தமிழ கத்திற்கும் இடையே உள்ள உறவை புதுப்பிக்கும் நோக்கில் வேர்களைத் தேடி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் வாழும் 18 முதல் 30 வயது வரையிலான தமிழ் இளைஞர்களை தமிழக அரசு செலவில் தமிழகத்திற்கு வரவழைத்து அவர்கள் தமிழர்களின் பெருமை அறியும் விதமாக இந்த பண்பாட்டு பயணத்திட்டம் உதவு கிறது. இந்த நிகழ்ச்சியில் 100 அயலகத் தமிழர்க ளுக்கு ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம் ஆகி யோர்  வாழ்த்து தெரிவித்து, நினைவு பரிசு களை வழங்கினர். உடன் நகர மன்ற தலை வர் தேவி பென்ஸ் பாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் இராஜராஜன், நேர்முக உதவியாளர் (பொது) ஏகாம்பரம் (பொறுப்பு), வட்டாட்சியர்கள் செல்வி. மகாலட்சுமி, ஆனந்தன், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெயபிரகாஷ், இளமுருகன் (பொறுப்பு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.