tamilnadu

img

24 மணி நேரத்திற்குள் சீரமைத்த மின் ஊழியர்கள்

24 மணி நேரத்திற்குள் சீரமைத்த மின் ஊழியர்கள்

சூறைக்காற்றால் சேதமான 16 உயர் மின் கம்பங்கள்

கோவை, மே 8– கோவை மாநகரப் பகுதியில் புதனன்று சூறைக் காற்றால், மரம் ஒன்று விழுந்து அடுத்தடுத்து மின் கம்பங்கள் விழுந்து, மின் தடைபட்ட நிலையில், மின் ஊழியர்கள் ஓய்வு உறக்கமின்றி 24 மணி நேரத்திற்குள்ளாக சீரமைத்துக்கொடுத்தது, பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.  கோவையில் புதனன்று வீசிய சூறைக்காற்று டன் கூடிய கனமழையின் காரணமாக, காந்தி புரம் வி.கே.கே மேனன் சாலையில் புங்கைமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இந்த மரம் உயர் மின் அழுத்த கம்பிகளின் மீது விழுந்தது. இதன் விளைவாக, அடுத்தடுத்து மொத்தம் 16 உயர் மின் அழுத்த கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் சித்தாபுதூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட  வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட் டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வா ரிய ஊழியர்கள், முதற்கட்டமாக அப்பகுதி மக்க ளுக்கு தற்காலிக மின் இணைப்பை வழங்கினர். பின்னர், நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரிய தொழி லாளர்கள் இரவு முழுவதும் தீவிரமாக சேதம டைந்த கம்பங்களை அகற்றும் பணியிலும், புதிய கம்பங்களை நிறுவும் பணியிலும் ஈடுபட்டனர். இந்த சீரமைப்பு பணியில் புதிதாக 16 உயர் மின் அழுத்த கம்பிகள் மற்றும் மின் கம்பிகள் பொருத்தப்பட்டன. அடுத்தடுத்து 16 உயர் மின்  கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப் பட்ட போதிலும், மின்வாரிய ஊழியர்கள் துரித மாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் அனைத்து சீரமைப்பு பணிகளையும் முடித்து மின் இணைப்பை வழங்கியதற்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.