tamilnadu

img

நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சிபிஎம் வார்டு உறுப்பினர் தர்ணா

நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து  சிபிஎம் வார்டு உறுப்பினர் தர்ணா

உதகை, ஜூன் 7- மக்கள் நலன் குறித்து செயல்படாத கூடலூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர் லீலா வாசு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய கூடலூர் நகராட்சிக்கு, வெளி மாவட்ட, மாநிலங்களிலிருந்து எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறுவதில்லை. அதற்கான முன்னெடுப்புகளையும் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் எடுப்பதில்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அரசு பல திட்டங்களை முன் வகுத்தாலும், இங்குள்ள அதிகாரிகளின் மெத்தனப்போக்கினால் அரசின் முன் முயற்சிகள் அனைத்தும் வீணாகப் போகிறதென, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், கூடலூர் நகர்மன்றக் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. அப்போது, மக்கள் நலனில் அக்கறையில்லாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 20 ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் லீலா வாசு, தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.