Children's literature on behalf of Tamu Ekasa
கோவை, மே 4- தமுஎகச கோவை மாவட்டக்குழு சார்பில், சிறார் இலக்கியம் என்ற தலைப்பில் இலக்கியச் சந்திப்பு நடை பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க கோவை மாவட்டக்குழு சார்பில், 260 ஆவது இலக் கியச் சந்திப்பு, சிறார் இலக்கியம் என்ற தலைப்பில் ஞாயி றன்று நடைபெற்றது. கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தாமஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற நிகழ் விற்கு கவிஞர் ச.பிரியா தலைமை வகித்தார். ரா.பூவிழி வரவேற்றார். இந்நிகழ்வில் பங்கேற்ற சிறுவர் சிறுமி யர் கதை சொல்லி, கவிதை வாசித்தனர். எழுத்தாளர் சரிதா ஜோ, பாலர் பூங்கா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.உஷா ஆகியோர் வாழ்த்திப் பேசினார். இதில், தமு எகச மாவட்டச் செயலாளர் அ.கரீம், மாவட்டத் தலை வர் தி.மணி, மாநில செயற்குழு உறுப்பினர் மீ.உமா மகேஸ்வரி, மாநிலக்குழு உறுப்பினர் மு.ஆனந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்க முருகேசன் உட் பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கவிஞர் பாக்ய லட்சுமி நன்றி கூறினார்.
பாலத்திலிருந்து விழுந்து 2 பேர் பலி சம்பவ இடத்தில் ஆட்சியர் ஆய்வு
திருப்பூர், மே 4- தாராபுரம் அருகே பாலத்திலிருந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், சூரியநல் லூர் கிராமம், சேர்வக்காரம்பாளையத்தைச் சேர்ந்த நாக ராஜ் (44) என்பவர், தனது மனைவி ஆனந்தி (38), மகள் தீட்சையா (12) ஆகியோருடன், சனியன்று இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தாராபு ரம் – காங்கேயம் சாலை, குள்ளாய்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்திலிருந்து இருசக்கர வாகனம் தவறி விழுந்த விபத்தில் நாகராஜ் மற்றும் ஆனந்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். இந்நிலையில், விபத்து ஏற்பட்ட பகுதியில் ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ராணி, தாராபுரம் வட்டாட்சியர் திர வியம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனி ருந்தனர்.
மே 7, 8 இல் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
தருமபுரி, மே 4- தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடி நீர்த் திட்ட குழாய் பராமரிப்புப் பணிகள் காரணமாக மே 7, 8 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவ தாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளூ ரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தில் தருமபுரி மாவட்டத் தில் 600 மீ.மி. விட்ட வார்ப்பு இரும்பு பிரதான குடிநீர் குழாயில் பராமரிப்புப் பணிகள் மே 7, 8 ஆகிய தேதிக ளில் நடைபெறவுள்ளன. இதனால் தருமபுரி மாவட்டத் திற்குட்பட்ட தருமபுரி நகராட்சி, பென்னாகரம், கடத் தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர், பி. மல்லாபுரம் ஆகிய பேரூராட்சிகள், ஏரியூர், நல்லம் பள்ளி, க மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிக ளுக்கு இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகிக்க இய லாது. எனவே, ஒகேனக்கல் குடிநீரைச் சேமித்து வைத்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் பெறப்படும் நீரை இதர பயன் பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என தெரி விக்கப்பட்டுள்ளது.
பழமையான கோவிலை இடிக்க எதிர்ப்பு
சேலம், மே 4- ஏற்காடு அருகே 700 ஆண்டுகள் பழமையான கோவிலை இடிக்கக்கூடாது, என வலியுறுத்தி சேலம் வரலாற்றுச் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். சேலம் வரலாற்றுச் சங்கத்தின் தலைவர் இமானு வேல் ஜெயசிங், செயல் தலைவர் குமரவேலு, பொதுச் செயலாளர் பர்னபாஸ் ஆகியோர், வெள்ளியன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். இதன்பின் அவர்கள் செய்தியாளர் களிடம் கூறுகையில், ஏற்காட்டில் மாரமங்கலம் ஊராட் சிக்குட்பட்ட கோவிலூர் கிராமத்திலுள்ள 700 ஆண்டுகள் பழமையான வாணிஸ்வரர் சிவன் கோவில் இடிக்கப்பட வுள்ளதாக தெரிகிறது. வரலாற்று சிறப்புமிக்க பழமை யான தமிழ் கல்வெட்டுகள் கோவிலை சுற்றி அமைந் துள்ளன. கோவில் இடிக்கப்பட்டால் இந்த கல்வெட்டுக ளும் சேதமாகும். எனவே, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தலையிட்டு பழமையான இந்த கோவில் இடிக் கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், என்றனர்.
அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் தெரிவு செய் யப்பட்ட 20 மாணவ, மாணவிக ளுக்கு கையடக்க கணினிகளை யும், 112 பள்ளிகளுக்கு சிறப்பு கல்வி மென்பொருள்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட மெமரி கார்டுகளை யும் கோவை ஆட்சியர் பவன் குமார் சனியன்று வழங்கினார்.
பூட்டிய வீட்டில் நகை கொள்ளை
கோவை, மே 4- குனியமுத்தூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, 34 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்ப வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம், குனியமுத்தூர், அண்ணாம நாயக்கர் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன் (35). இவர் கடந்த ஏப்.28 ஆம் தேதியன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவாவிற்கு சென்றுவிட்டார். அதன் பிறகு சுற்றுலா முடிந்து மீண்டும் சனியன்று வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதை யடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த தங்க சங்கிலி, வளையல், பிரேஸ் லெட் உட்பட 34 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப் பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மோகனகிருஷ்ணன் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மோப்ப நாய் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இந்த கொள்ளை சம்ப வத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரி டையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.