tamilnadu

img

50 ஆண்டுகளுக்கு பின், பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவியர் சந்திப்பு

50 ஆண்டுகளுக்கு பின், பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவியர் சந்திப்பு

நாமக்கல், அக்.5- ராசிபுரம் தேசிய  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 1975-76 ஆம் ஆண்டு பயின்ற மாணவிகள் 45 பேர், சனியன்று பள்ளியில் ஒன்று கூடி மாணவப் பருவத்தை நினைவு கூர்ந்து மகிழ்ந்து கொண்டாடினர். இதற்கான விழாவில் முன்னாள் மாணவி எஸ்.திரிபுர சுந்தரி வரவேற்றார். என்.கே.வசந்தி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜெ.பாபு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மாணவிகள் 45 பேரும் தங்கள் தற்போதையை நிலை, குடும்ப சூழல் குறித்து பகிர்ந்து கொண்டனர். மேலும், பள்ளிக்காலங்களில் விளையாடி மகிழ்ந்த பழைய நாட்களை நினைவு கூர்ந்து ஒருவருக்கொருவர் கூடி மகிழ்ந்தனர். மேலும் தங்களது பள்ளி ஆசிரியர்களை கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசளித்து கெளரவித்தனர். பள்ளி வளாகத்தில் பொன்விழா ஆண்டு நினைவு மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.