கோவை, பிப். 27– தனியார் நிறுவனத்தின் உற்பத்திக்காக கணக்கெடுப்பில் ஈடுபட்ட நான்கு பேர் ஆதார் உள் ளிட்ட அடையாள அட்டை கேட்ட தால் என்பிஆர் கணக்கெடுப்புக் காக வந்துள்ளனர் என நினைத்து பொதுமக்கள் அவர்களை சிறை பிடித்து காவல்நிலையத்தில் ஒப் படைத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றிற்கு எதி ராக நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வரு கிறது. இதனையடுத்து பல்வேறு மாநில அரசுகள் என்பிஆர் கணக் கெடுப்பை நடத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் இயற் றியும், வெளிப்படையாக அறிவித் தும் உள்ளனர். மேலும், தமிழகத் தின் ஒட்டு மொத்த எதிர்க்கட்சி களும் என்பிஆர் கணக்கெடுப் பிற்கு ஒத்துழைக்க வேண்டாம் என மக்களிடம் அறைகூவல் விடுத்தும், இரண்டு கோடி பேரி டம் கையெழுத்து பெற்றும் குடி யரசு தலைவரிடம் அளித்துள் ளனர். இந்நிலையில், கோவை உக் கடம், கோட்டை மேடு பகுதியில் உள்ள வீடுகளில் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அடையாளங்களை நான்கு பேர் சேகரித்துள்ளனர். மேலும் சேக ரித்த விபரங்களை செல்போன் மற்றும் டேப்லெட்டில் பதிவு செய் துள்ளனர். இதனிடையே, சந்தேக மடைந்த அப்பகுதி பொதுமக்கள் நான்கு பேரையும் சுற்றி வளைத்து கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு, தடுப்பூசி கணக்கெடுப்பு மற்றும் விற்பனை பொருட்கள் குறித்த கணக்கெடுப்பு என முண்ணுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக உக்கடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி நான்கு பேரை யும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த நான்கு பேரும் வில்சன் கேர் என்ற குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் தனியார் நிறுவன ஊழியர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் விற்பனை பொருட்கள் மக்களிடம் கொண்டு செல்வதற்காக கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிறுவ னத்தில் கணக்கெடுப்பு செய்தோம் என்பதை நிறுவனத்திடம் ஆதா ரத்தை காட்ட ஆதார் கார்டு எண் களை வாங்கியதாக கூறியுள்ள னர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரு வதாக போலீசார் தெரிவித்துள்ள னர்.