அவிநாசி, ஜூன் 20- அவிநாசியில் விசேஷ நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தீர்ப்ப தற்கு போக்குவரத்து காவல்துறை மற்றும் திருமண மண்டப உரிமையாளர் களின் ஆலோசனை கூட்டம் புதனன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அவிநாசியில் 14 தனியார் திரு மண மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களில் திருமணம் மற்றும் விசேஷ நாட்களில் அவிநாசி சுற்றுப்புற பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இதனால் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த திருமண மண்டபங்களில் சில ஆண்டு களுக்கு முன்பு அவரவர் சமுதாயத்தின் திருவிழா நாட்களில் தங்கி செல்வதற் காக கட்டப்பட்டன.
தற்போது திரு மண மண்டபங்களாக மாறி உள்ளது. இத் திருமண மண்டபங்களாக செயல் படுவதற்கு மூன்றாண்டுக்கு ஒருமுறை அங்கீகாரம் பெறவேண்டும். அப்போது வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மண்டபத்தில் உள்ள வசதிகளை ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். ஆனால் பார்க்கிங் வசதி எந்த மண்டபங் களிலும் இல்லை. ஆனால் திருமண மண்ட பங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட் டுள்ளது. இதன்காரணமாக திருமண நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என கடந்த சில தினங்களுக்கு முன்பு தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து போக்குவரத்து காவல் துறை மூலம் பேரூராட்சி நிர்வாகம், மண்டப உரிமையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போக்கு வரத்து காவல்துறை ஆய்வாளர் சண்மு கம் பங்கேற்று பேசுகையில், திருமணம் மற்றும் விசேஷ நாட்களில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் விசேஷங்களுக்கு வாகனங்களில் வருபவர்கள் பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. மண்டப உரிமையாளர்கள் பார்க்கிங் வசதி கூடிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கடுமை யாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து மண்டப உரிமை யாளர்கள் பேசுகையில், பார்க்கிங் வசதி செய்து தருவதற்கு எங்களுக்கு 3 மாதம் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று வேண்டுகோள் விடுத்தனர். போக்குவரத்து காவல் துறையும் ஏற்றுக்கொண்டு மூன்று மாத கால அவகாசம் கொடுக்கப்பட் டுள்ளது. இதற்கிடையே கூட்டத்தில் பங்கேற்ற சிலர், அரசுக்கு சொந்தமான காலி நிலம் உள்ளது. அந்த நிலத்தில் வாகனத்தை நிறுத்திக் கொள்ளலாம். இங்கு நிறுத்தப்படும் வாகனத்திற்கு கட்டணம் வசூலிக்கலாம் என தெரிவித்தனர். ஆனால், இதற்கு சில மண்டப உரிமையா ளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.