தருமபுரி, நவ.11- மாற்றுத்திறனாளிக்கு வழங்கப் படும் இலவச 4 சக்கர வாகனம் கேட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு மாற்றுத்திறனாளி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப ரப்பு ஏற்பட்டது. தருமபுரி ஒன்றியம், மாரவாடி கிரா மத்தைச் சேர்ந்தவர் இளங்கோ. கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு இவரது வலதுகால் முற்றிலும் அகற்றப்பட் டது. இடதுகாலும் செயலற்ற நிலை யில் உள்ளது. இதனையடுத்து மாற் றுத்திறனாளிகளுக்கு வழங்கும் 4 சக்கர வாகனம் கேட்டு தருமபுரி யில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் அலுவலகத்தில் விண்ணப் பித்திருந்தார். மேலும் தமிழக முதல மைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திலும் மனு அளித் தார். கடந்த ஓர் ஆண்டாக மனு வின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் திங்களன்று தரும புரி மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த இளங்கோ, கோரிக்கை அட்டையுடன் 4 சக்கர வாகனம் கேட்டு போராட்டத்தில் ஈடு பட்டார். இதனை அறிந்த மாற்றுத் திறனாளிகள் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் இளங்கோவிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நான்கு சக்கர வாகனம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தின் அடிப்படையில் போராட் டத்தைக் கைவிட்டார்.