tamilnadu

img

அமைச்சர் சீனிவாசன் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்க

உதகையில் ஆர்ப்பாட்டம்

உதகை, பிப்.7- பழங்குடியின சிறுவனை இழி வுபடுத்திய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப் புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு அமைப்பினர் உதகையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். முதுமலை புலிகள் காப்பகத் தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானை களுக்கான சிறப்பு நல்வாழ்வு புத்து ணர்வு முகாமை அமைச்சர் திண் டுக்கல் சீனிவாசன் வியாழனன்று துவக்கி வைத்தார். அப்போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த பழங்குடியின சிறு வனை அழைத்து தனது காலணி களைக் கழற்றிவிடச் செய்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து தமிழ கம் முழுவதும் கடும் எதிர்ப்பும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத் தியது.  இந்நிலையில், பாதிக்கப்பட்ட பழங்குடியினச் சிறுவன் மற்றும் அவரது  உறவினர்களை அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வெள்ளியன்று சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப் போது அந்தப் பகுதிக்கு சென்ற தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன் னணி, சமூக நீதி கட்சி ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகளை யும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், சிறுவனின் குடும்பத்தி னர் மற்றும் ஆளும் கட்சியினரைத் தவிர வேறு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதற்கிடையில் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் பொது இடத்தில் மாணவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் அடையாள குட்டன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலை வர் ஆர்.சதாசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.சங்கர லிங்கம், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.ராஜேந்திரன்,  சஞ்சீவி ராஜ், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கத்தின் மாவட் டக்குழு உறுப்பினர் பொ.ராமன் குட்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.