மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரியில்
மேட்டுப்பாளையம், செப்.20- மேட்டுப்பாளையம் அரசு வனக் கல்லூரியில் முதன்முறையாக அகில இந்திய வேளாண் காடுகள் ஆராய்ச்சி திட்ட பயிலரங்கம் நடைபெற்றது. இப் பயிலரங்கில் நாடு முழுவதிலிருந்தும் வேளாண் அறிவியிலாளர்கள் பங் கேற்றனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அகில இந்திய வேளாண் காடுகள் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்ட பயிலரங்கம் நடை பெற்றது. ஜான்சியில் உள்ள மத்திய வேளாண் காடுகள் ஆராய்ச்சி நிறு வனத்துடன் இணைந்து கடந்த புதனன்று (செப்.18) துவங்கிய இப் பயிலரங்கு வெள்ளியன்று (செப்.20) நிறைவடைந்தது. மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இப்பயில ரங்கில் 11 இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக மையங்கள் மற்றும் 24 வேளாண்மை பல்கலைக்கழக மையங்களில் இருந்து அறுபதிற் கும் மேற்பட்ட வேளாண் அறிவியலா ளர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக துணை வேந்தர் குமார் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், வேளாண் காடுகள் துறைத் தலைவர் பார்த்திபன் மற்றும் வனக் கல்லூரி முதல்வர் சுரேஷ் ஆகி யோர் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவரித்து பேசினர். மேலும், மத்திய வேளாண் காடுகள் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அனில்குமார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் சுப்பிரமணி யம் உள்பட நாடு முழுவதும் இருந்து வந்திருந்த வேளாண் அறிவியலா ளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் விவசாயமும் மரம் சார்ந்த தொழிற்சாலைகளும் ஒரு சேர பயனடையும் காடு வளர்ப்பு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய தேவைப்படும் புதிய தொழில் நுட்ப உதவிகள், மரம் சார்ந்த தொழிற்சாலைகளின் மூலப்பொருட் கள் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகை யில் மர உற்பத்தியை உயர்த்துவது, குளோனல் முறையில் மரம் வளர்ப்பு, மதிப்பு கூட்டல் என பல்வேறு திட்டங் கள் குறித்து இந்த பயிலரங்கில் விவாதிக்கப்பட்டது. மேலும், வேளாண் காடுகளின் முக்கியத்து வத்தை எடுத்துரைக்கும் நூல்கள் மற்றும் கையேடுகள் வெளியிடப்பட் டன. வேளாண் காடுகள் தொடர்பான மர பொருட்கள் அடங்கிய கண்காட் சியும் திட்ட அலுவலகத்தில் வைக் கப்பட்டிருந்தது.