tamilnadu

img

கோவை மத்திய சிறையில் கைதி மரணம் அடித்து கொல்லப்பட்டதாக உறவினர்கள் தர்ணா

கோவை, அக்.15– கோவை மத்திய சிறை யில் கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலை யில், அவரை காவல்துறை யினர் அடித்து கொன்றதா கக் கூறி அவரது உறவினர் கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டதால் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக் கானல், காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ராஜா (32). இவருக்கு ஷீபா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டுநராக சுரேஷ் ராஜா பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் திருட்டு வழக்கில் அவரை காவல்துறையினர் கைது செய்து  சிறையில் அடைத்துள்ளனர்.

இவ்வழக்கில் அவர் செப்.23 ஆம் தேதியன்று ஜாமீன் பெற்ற நிலையில், அன்று மாலையே வேறொரு திருட்டு வழக்கில் சுரேஷ் ராஜாவை பீள மேடு காவல் துறையினர் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.  இந்நிலையில், சிறையில் சுரேஷ் ராஜா புதனன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் குடும்பத்தாருக்கு காவல்துறையினர் தகவல் அளித்தனர். இத னால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத் தார், சுரேஷ் ராஜாவின் மரணத்தில் சந்தே கம் உள்ளதாக கூறி கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு அவரின் உறவினர் கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் அவரது மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இப்போராட் டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.