திருப்பூர், பிப். 10 – திருப்பூர் பூலுவபட்டி – பூண்டி ரிங் ரோட்டில் மொராஜி தேசாய் நகர் அருகே டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கு அனைத்துக் கட்சியினர் பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாநகரம் பூண்டி ரிங் ரோடு ஊர் மக்கள் மற்றும் 15 வேலம்பாளையம் தி.மு.க. பகுதி செயலாளர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் கவுன்சிலர் மாரப்பன் மற்றும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, கொ.ம.தே.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- பூலுவப்பட்டி-பூண்டி ரிங் ரோடு மொராஜி தேசாய் நகர் பகுதியில் பாரத் பெட்ரோல் பங்க் எதிர்புறத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளதாக கூறுகிறார்கள். இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் கோவில், பள்ளி மற்றும் மருத்து வமனை உள்ளது. எனவே டாஸ்மாக் கடைக்கு எங்களது எதிர்ப்பை தெரிவிக்கிறோம். இங்கு அமைக்கக்கூடாது என தெரிவித்திருந்தனர்.
பட்டா வகைமாற்றம் செய்க
மார்க்சிஸ்ட் கட்சியினர் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: வீரபாண்டியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிதிராவிடர் பலர் குடும்பத்து டன் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் 27 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. தற்போது வீடுகள் புதுப்பித்து கட்ட வங்கி கடனுதவி பெறவும், குடும்பத்தில் வேறு தேவைகளுக்காகவும், பத்திர பதிவு அலுவலகம் சென் றால், இந்த இடம் வகை மாற் றம் செய்து உட்பிரிவு செய்யப்ப டாமல் உள்ளதால், பத்திர பதிவு செய்ய முடியாது என மறுக்கிறார் கள். இது தொடர்பாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என் றனர். நாச்சிபாளையம் செந்தில் நகரை சேர்ந்த பாண்டீஸ்வரி மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வரு கிறோம். நாங்கள் அங்கு வீடு வாங்கும்போது, தண்ணீர் வசதி, தெருவிளக்கு என அனைத்து வசதிகளும் செய்து தருகிறோம் என உறுதியளித்தனர். ஆனால் எங்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை. கழிவுநீர் வடிகால் இல்லாததால், தண்ணீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாகி வரு கிறது. எனவே எங்களுக்கு அடிப் படை வசதிகள் செய்துதர வேண் டும். அரசு சலுகைகள் என்ன வெல்லாம் இருக்கிறதோ, அந்த சலுகைகள் அனைத்தையும் பெற்றுத்தர வேண்டும் எனக் கேட் டுக் கொண்டனர்.
செட்டிபாளையம், லட்சுமி நகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில்: எங்கள் பகுதி யில் 2ஆவது குடிநீர் திட்ட பயன்பாடு செயல்பட்டு வந்தது. தற்போது ஒரு ஆண்டுக்கு மேலாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவிநாசி அருகே உள்ள வெள் ளமடை தத்தனூர் ஊராட்சியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளமடை யிலுள்ள பகுதியில் அவிநாசி யைச் சேர்ந்த செங்கோடன் என்பவர் பன்றிகளை வளர்த்து வருகிறார். இதனால் இந்த பகுதியில் ஏற்படும் கழிவுகள் மற்றும் துர்நாற்றத்தால் அங்கு வசிக்க முடியாத நிலை உள்ளது. எனவே பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் இந்த பன்றிகளை வளர்க்க தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். திருப்பூர் திருநீலகண்டபுரம், கொடிக்கம்பம் உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில்:- நாங்கள் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு காங்கேயம் அருகே நிழலி கிராமத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இந்த பட்டா வழங்கி பல ஆண்டு கள் ஆகிய நிலையிலும், எங்க ளுக்கு வழங்கப்பட்ட இடத்தை காண்பிக்கவில்லை. இடமும் வழங்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை உடனே கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியிருந்த னர்.
ஜல்லிக்கட்டினால் சுகாதார சீர்கேடு
அலகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி கொடுத்த மனுவில்: அலகுமலை கிராமத்தில் கடந்த 2-ஆம் தேதி மாவட்ட நிர் வாகத்தின் சார்பாகவும், ஜல்லிக் கட்டு கூட்டமைப்பு சார்பாகவும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதனால் அப்பகுதியில் குப்பை கள் அதிகமாக உள்ளதுடன் சுகா தார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சரிசெய்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுபோல் எனக்கு செல்போன் வாங்க அரசு நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.