நாமக்கல், ஜூலை 2- நாமகிரிப்பேட்டை பகுதியில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப் பேட்டை அருகே உள்ள வீர போயர் தெருவில் 40க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி பொதுமக்கள் கட்டு மான தொழிலுக்கு சென்று வருகின்ற னர் இவர்கள் வசிக்கும் 57/1 சர்வே எண் கொண்ட அரசு புறம்போக்கு நிலம் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 25.6.2018 அன்று நீதிமன்றத்தின் மூலம் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர். இந்நிலையில் 50 ஆண்டு காலமாக வசித்து வரும் கட்டுமான தொழிலா ளர்கள் வசித்து வரும் வீடுகளுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.