tamilnadu

செய்தித் துளிகள்

சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 11,000 தாண்டியது

சென்னை மாநகரப் பகுதியில் திங்க ளன்று (மே 25) 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. அதாவது 11  ஆயிரத்து 125 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக சென்னையில் தின மும் கொரோனா பாதிப்பு 500க்கு அதிக மாக உள்ளது.

கொரோனாவால்  8 பேர் உயிரிழப்பு

சென்னையில் உள்ள மருத்துவமனை களில் கொரோனா தொற்றோடு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர்.  வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சூளைமேட்டைச் சேர்ந்த 86 வயது முதியவரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபரும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 65 வயது  முதியவரும் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனை யில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவள்ளூரை சேர்ந்த 50 வயது ஆண் ஒருவரும், கொடுங்கையூரை சேர்ந்த  46 வயது ஆண் நபரும் உயிரிழந்துள்ளனர். ஓமாந்தூரார் மருத்துவமனையில் மண்ணடியை சேர்ந்த 75 வயது முதியவரும்,  பூந்தமல்லியை சேர்ந்த 75 வயது முதிய வரும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை யில் ஓட்டேரியை சேர்ந்த 46 வயது நபரும்  உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு:  54 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்படி மாவட்டத்தில்  பாதிக்  கப்பட்டோரின் எண்ணிக்கை 832ஆக அதிக ரித்துள்ளது. இவர்களில் 255 பேர் குண மடைந்துள்ளனர். 8 பேர் இறந்துள்ளனர். 568 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பிறந்து 2 நாளான குழந்தைக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம், நன்னிலம் அரசு  மருத்துவமனையில் கொரோனா தொற்று டன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த இரண்டு நாளே ஆன குழந்தைக்கு தொற்று இருப்பது பரிசோதனை மூலம் உறுதியாகி உள்ளது.

ஆதரவற்றோர் விடுதியில் 20 நபர்களுக்கு தொற்று

சென்னை அசோக்நகரில் திரைப்பட  நடிகர் ஒருவர் நடத்திவரும் ஆதரவற்றோர்  விடுதியில் உள்ள 18 பேர், பெண் பணி யாளர்கள் 2 பேர்என 20 நபர்களுக்கு  கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது.

5 மண்டலங்களில் பாதித்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது

சென்னையில் உள்ள 15 மண்டலங்க ளில் அதிகபட்சமாக ராயபுரம் மண்ட லத்தில் ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இத னைத் தொடர்ந்து கோடம்பாக்கம் மண்ட லத்தில் ஆயிரத்து 460 பேரும்,  திரு.வி.க. நகரில்  மண்டலத்தில் ஆயிரத்து 188  பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில்  ஆயிரத்து  118 பேரும், தண்டையார்பேட்டை  மண்டலத்தில் ஆயிரத்து 44 பேரும் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்

ஊரடங்கு மீறல்:  5.26 லட்சம் பேர் கைது

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4 லட்சத்து 94 ஆயிரத்து 770  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 லட்சத்து  26 ஆயிரத்து 507 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 4 லட்சத்து  20 ஆயிரத்து 688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அபராதமாக 7  கோடியே 63 லட்சம் ரூபாய் வசூலிக் கப்பட்டுள்ளது.

சென்னையில்  204 கர்ப்பிணிகளுக்கு கொரோனோ உறுதி

சென்னையில் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 204  கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று  உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதன்படி  எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவ மனையில் 100, அரசு ராயபுரம் ஆர்எஸ்  ஆர்எம் மருத்துவமனையில் 45, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 30, திருவல்லிக்கேணி கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் 29 என 204 கர்ப்பிணிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கார் தொழிற்சாலையில்  3 பணியாளர்களுக்கு கொரோனா

சென்னை அருகே உள்ள திருபெரும்  புதூர் ஹூண்டாய் கார் தொழிற்சாலையின் பணியாளர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவலை தடுக்க நான்காம் கட்ட ஊரடங்கு  அமலில் உள்ள நிலையில், மத்திய மாநில  அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. தொழிற்சாலைகள் 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் பணிகளை தொடங்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி, திருபெரும்புதூரில் உள்ள நாட்டின் மிகப்பெரிய இரண்டாவது கார்  தொழிற்சாலையான ஹூண்டாய் கார்  தொழிற்சாலை மே 8ம் தேதி முதல் செயல்  பட்டு வருகிறது. இந்நிலையில் தொழிற்  சாலையில் நடந்த மருத்துவ பரி சோதனையில் மூன்று பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் பணியாளரின் குடும்பத்தினர் ஒருவருக்கும் தொற்று கண்ட றியப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய நபர் உயிரிழப்பு 

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் 54 வயதுள்ள ஆண் ஒருவர்  கடந்த 9-ம் தேதி கொரோனா தொற்றுடன் சிகிச்சைப் பெற்று வந்தார். 18ந் தேதி குண மடைந்ததாக அவர் வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளார். அரசின் புதிய வழிகாட்டல்படி அப்போது அவருக்கு கொரோனா பரி சோதனை செய்யப்படவில்லை. இந்நிலை யில் வீட்டுக்கு சென்ற மூன்றாவது நாளில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஸ்டான்லி மருத்துவ மனைக்கு கடந்த 21-ம் தேதி அவரை கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர்  வரும் வழியிலேயே இறந்து விட்டதாக  மருத்துவமனை நிர்வாகம் தெரி வித்துள்ளது. இறந்த பிறகும் அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளவில்லை.

சென்னை: உயிரிழந்த மூதாட்டிக்கு கொரோனா

சென்னை ராயப்பேட்டை மருத்துவ மனையில் உடல்நலக்குறைவால் 2 நாட்க ளுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வந்த 88 வயது மூதாட்டி உயிரி ழந்தார். அவரது சளி மாதிரியை பரி சோதித்ததில் கொரோனா தொற்று இருந்தது உறுதியாகி உள்ளது. இதனால் அந்த வார்டில் சிகிச்சை அளித்த மருத்துவர், செவிலியர்கள், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், உடனிருவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும்  நோய்த் தொற்று பரி சோதனை செய்யப்படுகிறது.

250 காவலர்களுக்கு கொரோனா

சென்னையில் உதவி ஆணையர் உட்பட 250க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்: 19 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 19  நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதிப்படுத்தப்பட்டது. இதனால்  மாவட்டத்தில் கொரோனா தொற்று  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 165 பேர்  குணமடைந்துள்ளனர். ஒருவர் உயிரி ழந்துள்ளார். 138 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை: அழுகிய நிலையில் உடல் கண்டெடுப்பு


சென்னை சூளைமேடு உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த ஜீவன்  (வயது 80), தீபா (வயது 70) தம்பதிக்கு  கொரோனா இருப்பதாக சில நாட்க ளுக்கு முன்பு குடியிருப்புவாசிகள் சுகா தாரத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். பரிசோதனை செய்து கொள்ள தம்பதியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையல் திங்களன்று (மே 25) துர்நாற்றம் வீசிய தாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் சென்று கதவை உடைத்து வீட்டுக்குள்ளே சென்ற போது, அழுகிய நிலையில் இருவரது உடல் கண்டறியப்பட்டுள்ளது. இதனை யடுத்து உடல்கள் கீழ்பாக்கம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்தில் காரின் மேல் ஆள் விழுந்தது கூட தெரியாமல் தப்ப முயற்சி - கைது

சினிமாவில் நடப்பது போல சென்னை வானகரத்தில் விபத்து ஒன்று நடந்தது. அயப்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ஞாயிறன்று (மே 24) இரவு வானகரத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த கார் மோத, தூக்கி வீசப்பட்ட ரஞ்சித், அதே காரின் மேலே விழுந்தார். இந்த விபத்து நிகழ்ந்ததும் காரை நிறுத்தாமல், காரின் மேல் ஆள் விழுந்தது  கூட தெரியாமல் தப்பிக்கும் நோக்கத்தோடு ஓட்டுனர் காரை  வேகமாக ஓட்டிச் சென்றுள்  ளார். இதனை அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள் பார்த்து, ஒரு கிலோ மீட்டர் தூரம் காரை துரத்திச்சென்று காயமடைந்த ரஞ்சித்குமாரை மீட்டனர். காரின் ஓட்டுநரை கைது செய்தனர்.