கோவை, அக்.30- கோவை ரேஸ்கோர்ஸ் அரசு ஊழி யர்கள் குடியிருப்பு பகுதியில் விநியோ கம் செய்த குடிநீரில் தவளை குட்டிகள் இருந்ததால் பெரும் அதிர்ச்சி அடைந் துள்ளனர். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட ஆட்சியர் வீட்டின் பின்புறம் உள்ள வருவாய்துறை அலுவலர்கள் குடி யிருப்பு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு தரைமட்ட குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு பின்னர், மோட்டர் மூலம் சம்மந்தப் பட்ட குடியிருப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட டேங்குகளில் தண்ணீர் நிரப்பப்படு கிறது.
இந்நிலையில், வெள்ளியன்று 10 நாட்களுக்கு தண்ணீர் விநியோகிக் கப்பட்ட நிலையில், வந்த தண்ணீர் சேறும், சகதியுமாக வந்துள்ளது. மேலும், இந்த குடிநீரோடு ஏராளமான தவளை குட்டிகளும் வந்துள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் பெரும் அதிர்ச்சி யடைந்தனர். இது போன்ற தண்ணீரை குடித்தால் பல்வேறு நோய் தொற்றுக ளுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ள தாக அக்குடியிருப்பில் வசிக்கும் அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே, அதிகாரிகள் உடனடியாக குடி நீர் தொட்டிகளை பராமரிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.