tamilnadu

img

ஏரி வண்டல் மண் சட்டவிரோதமாக விற்பனை

நாமக்கல், நவ.29- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரியில்  அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுத லாக வண்டல் மண்ணை ஆளும்கட்சியினர் எடுத்து விற்பனை செய்வதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.  நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம் அருகே  உள்ள ஏ.கே.சமுத்திரம் ஊராட்சி யில் ஒட்டனக்குட்டை ஏரி சுமார் 22.5 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை குடிமராமத்து பணியின் போது வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்து தாங்கள் விளைநிலங்களில் பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், இந்த வண்டல் மண்ணை  விவசாயிகள் போர்வையில் ஆளும் கட்சி யினர் பொக்லைன் மூலம் அனுமதிக் கப்பட்ட அளவை விட கூடுதலாக எடுத்து வருகின்றனர்.  இவ்வாறு நாள்தோறும் 50 டிப்பர் லாரிகள் மூலம் மண் எடுக்கப்படுகிறது. இந்த வண்டல் மண் யூனிட் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப் படுகிறது. எனவே, முறைகேடாக வண்டல் மண் எடுப்பதை தடுத்து நிறுத்தி, இயற்கை வளங்களை பாதுகாக்க வட்டாட்சியர் தலையிட வேண்டுமென இப்பகுதி விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.