tamilnadu

ஈரோடு முக்கிய செய்திகள்

பணியிட மாற்றத்தை கண்டித்து கூட்டுறவு சங்க பணியாளர்கள் பேரணி

ஈரோடு, ஜூலை 8- ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்க பணியாளர்கள் பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியா ளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கோரிக்கை விளக்க பேரணிக்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மேசப்பன் தலைமை வகித்தார். இதில் தமிழகத்தில் 4,500 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணி செய்யும் செயலாளர்களை பணி யிட மாற்றம் செய்ய வரப்பெற்றுள்ள உத்தரவை திரும்ப பெற வேண்டும். செயலாளர் பணிநிலைக்குக் கீழ் பணி  புரியும் விற்பனையாளர்கள், பிற அலுவலக பணியாளர் கள், சுமார் 20 ஆண்டுகளாகப் பதவி உயர்வு கிடைக்காமல் உள்ளனர். அவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வும், சலு கைகளும் வழங்க வேண்டும். நலிவடைந்துள்ள சங்கங்கள், நலிவடையும் நிலையில் உள்ள சங்கங்களுக்கு, தேவையான நிதியாதாரத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். கடந்த ஆட்சி களில் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட போது, கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கான தொகையை மாநில அரசு உடனடியாக வழங்க வேண்டும், என வலியுறுத்தி ஊர்வலமாக வந்து மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் மனு அளித்தனர். மாவட்ட தலை வர் அன்பரசன், மாவட்ட பொருளாளர் செங்கோட்டையன் உட்பட பலர் பங்கேற்றனர்.

சாதிச் சான்று கோரி பழங்குடியினர் மனு

ஈரோடு, ஜூலை 8- தமிழகத்தில் குற்ற பழங்குடி சட்டத்தில் பாதிக்கப்பட்ட 68 சாதியினருக்கு, தமிழகத்தில் சீர்மரபினர் பழங்குடிகள் என சான்று வழங்க அரசாணை வெளியிட்டும், சான்று வழங்க மறுப்பதை கண்டித்து வீரபோயர் இளைஞர் பேரவை சார்பில் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம்  மனு கொடுத்தனர். அம்மனுவில், ஒட்டர், போயர் போன்ற 68 வகையான சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு சீர்மரபினர் சமுதாயம் (டி.என்.சி) என்று சான்று வழங்கினர். இதனை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டத்துக்குப்பின், சீர்ம ரபினர் பழங்குடிகள் (டி.என்.டி.,) என சான்று வழங்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இருப்பினும், இதனை அமல் படுத்தாமல் டி.என்.சி என சான்று வழங்குகின்றனர். இதனால், கல்வி, வேலைவாய்ப்பு, அரசின் சலுகை போன்ற பல்வேறு பாதிப்புக்களை இச்சமூக மக்கள் சந்திக்கின்னர். திருவண்ணாமலை மாவட்டத்தைப்போல ஈரோடு, நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங் களிலும் சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.

வீடு கட்டி தருவதாக கூறி மோசடி

ஈரோடு, ஜூலை 8- ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் சாலை பகுதியில் வசித்து வருபவர் சுமதி. இவர் பெரியார் நகர் பகுதியில் ஸ்டார் கன்சல்டிங் கனெக்சன் நிறுவனத்தில் இடம், வீடு கட்டித் தருவதற்காக மூன்று லட்சம் பணம் ரொக்கமாகக் கொடுத்துள்ளார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இடம் மற்றும் வீடு கட்டி தராமல், பணமும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து அருகில் விசாரித்தபோது அவர் இதே போன்று பலரிடம் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் முதல் 10 லட்சம் வரை பணம் வாங்கி இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், வீடு கட்டித் தருவதாக பணம் வசூலித்த நபர்கள் அலுவலகத்தை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். எனவே வீடு கட்டித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் பாதிக்கப்பட்ட மக்கள் திங்களன்று மனு அளித்தனர்.

கருவில்பாறை வலசு குளத்தை தூர்வார கோரிக்கை

ஈரோடு, ஜூலை 8- ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் கருவில் பாறை வலசு குளத்தில் இருந்து வெளியேறும் நீர் பிச்சைக்காரன் பள்ளம் ஓடை வழியாக சூலை அகரஹாரம் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த நீர்வழிப்பாதை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், சாய ஆலை நீர் அதில் ஓடுகிறது. இதனால் விவசாயத்தை இழந்த விவசாயி கள் மீண்டும் பாசன வசதி பெற்று விவசாயம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். அப்பகுதியல் செயற்கைக் கோள் புகைப்பட உதவி யுடன், விதி மீறி இயங்கும் சாய ஆலைகளை மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தின் நீர் வளத்தை சாய ஆலைகள் பயன் படுத்தத் தடை விதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவ லரிடம் மனு கொடுத்தனர்.