தருமபுரி, நவ.28- உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட் டங்கள் அடங்கிய மண்டலத்தை சார்ந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று தருமபுரி ஜோதி மஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எல்.சுப்பிரமணியன் தலை மையில் வகித்தார். மாவட்ட ஆட்சியர்கள் எஸ்.மலர்விழி, சி.அ.ராமன், கா.மெகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்த தயார் நிலை, வாக்குச்சாவடி அலுவலர்கள் நிய மனம், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல் மற்றும் அங்கு மேற்கொள்ளப் பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் குறித்தும் எதிர்வரும் உள் ளாட்சி தேர்தல்களுக்காக செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் விவாதிக் கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற் கொள்ள வேண்டிய தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள், வேட்பு மனுக்கள் பெறுதல், பதற்றமான வாக்குச்சாவடி களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாக்குச்சாவடி களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் அறிவுரைகள் வழங்கப்பட்டன. எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு தேவையான வாக்குச்சாவடி அலுவலர் களின் விவரங்களை சேகரித்து இணைய தளத்தில் பதிவேற்றவும், கணினி முறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்வது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன் படுத்துவது குறித்தும் ஊரக மற்றும் நகர்ப் புற தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய அலுவலர்களால் விளக்கமான பயிற்சி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் காவல் துறை தலைவர் (தேர்தல் பிரிவு) சேஷசாயி, மாநில தேர்தல் ஆணைய முதன்மை தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்) க.சரவணன், மாநில தேர்தல் ஆணைய உதவி ஆணையர் எ.கே.சம்பத், மாவட்ட வருவாய் அலுவலர்கள், திட்ட இயக்குநர்கள், மாநகராட்சி ஆணையாளர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர்கள் உள்ளிட்ட தேர்தல் நடத்தும் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.