tamilnadu

img

30 கிராமங்களுக்கான இணைப்பு சாலை கோரிக்கை பி.ஆர்.நடராஜன் எம்.பி., நேரில் ஆய்வு

கோவை, ஜூன் 20–  கோவை துடியலூர் ரயில் நிலையத்தையொட்டிய 30 கிரா மங்களின் இணைப்பு சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும் என்கிற பொதுமக்களின் கோரிக் கையையடுத்து பி.ஆர்.நடராஜன் எம்.பி., நேரில் ஆய்வு செய்தார்.

கோவை துடியலூரில் ரயில் நிலையத்தில் இருந்து என்ஜிஜிஓ காலனி கேட் வரையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தார் சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  குறிப்பாக, கோவில்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட 30 கிராமங்களின் இணைப்பு சாலையாக இந்த சாலை உள்ளது. இந்தச்சாலை யின் ஒருபகுதி ரயில்வே துறைக்கு சொந்தமாக இருந்து வருகிறது.

ஏற்கனவே சாலை இருந்து வந்த நிலையில், ஸ்டேன்ஸ் உர நிறு வனம் இந்த சாலையில் அதிகப் படியான லாரிகளை இயக்கி யதால் ரயில்வேதுறை சாலையை பயன்படுத்தாமல் இருக்க தடை  ஏற்படுத்தியிருந்தது. இதனை யடுத்து ஸ்டேன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றது.  இந்நிலையில் கோவை நாடா ளுமன்ற உறுப்பினரின் முயற்சி யால் துடியலூர் ரயில் நிலையத் தில் பயணிகள் ரயில் நின்று செல்ல  ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை யடுத்து துடியலூர் ரயில்நிலையம் நவீனப்படுத்தும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந் நிலையில் இந்த சாலையை புணர மைப்பதன் மூலமாக பொதுமக்கள்  பெரிதும் பயனடைவர்.

இச்சூழ லில் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் இந்த சாலையை ஆய்வு செய்தார். இதன் பின் ஸ்டேன்ஸ் நிர்வாகம் மற்றும் ரயில்வே துறையினருடன் கலந்து ஆலோசித்தார்.  இதனைத்தொடர்ந்து பி.ஆர்.நடராஜன் எம்பி கூறுகையில், இச்சாலை தொடர்பாக ஸ்டேன்ஸ்  நிர்வாகம் நீதிமன்றத்தில் தொடர்ந் துள்ள வழக்கை திரும்பப் பெறு வதற்கு கேட்டுள்ளோம். சாலையை அமைக்க எந்த ஆட்சே பனையும் செய்யாமல் இருக்க ரயில்வே துறை அதிகாரிகளிடமும் பேசியுள்ளோம்.

சுமூகமான முடிவை எடுத்து அசோகபுரம் ஊராட்சி மற்றும் கோவை மாநக ராட்சி எல்லைக்குள் இந்த சாலை வருவதால் இந்த உள்ளாட்சி அமைப்புகளை பயன்படுத்தி தார் சாலையை அமைக்க ஒப்புதல் பெற்று பொதுமக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறினா.

முன்னதாக, இந்த ஆய்வின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, பெரியநாயக் கன்பாளையம் ஒன்றிய செயலா ளர் என்.பாலமூர்த்தி, யு.கே.சிவ ஞானம் மற்றும் அசோகபுரம் ஊராட்சியின் தலைவர், துணை  தலைவர்கள், ஸ்டேன்ஸ் நிறுவ னத்தின் நிர்வாகிகள் மற்றும் குடியிருப்ப்போர் நலச்சங்க நிர் வாகிகள் ஆகியோர் உடனிருந் தனர்.