tamilnadu

img

பிஎஸ்என்எல்- லை லாபத்துடன் இயக்கிட 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்க பிஎஸ்என்எல் ஊழியர், அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.1– பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற் றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், 4ஜி சேவையை உடனே வழங்க வேண்டும், பிஎஸ் என்எல் ஒப்பந்த தொழிலாளர் களுக்கு 9 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பு, ஆட் குறைப்பு செய்யாதே, ஓய்வுபெறும் வயதை 58 ஆக குறைக்காதே, அரசு விதிப்படி ஓய்வூதிய பங்களிப்பை செலுத்து உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்ட மைப்பின் சார்பில் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவது என முடி வெடுக்கப்பட்டது. இதன்ஒரு பகுதியாக கோவை, நீலகிரி உள் ளிட்ட மாவட்டங்களில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  கோவை தலைமை பிஎஸ் என்எல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சி.ராஜேந்தி ரன், மாநில செயலாளர் பாபுராதா கிருஷ்ணன், அதிகாரிகள் சங்க தலைவர்கள் பிரசன்னா, காவெட்டி ரங்கன், மற்றும் வேலுசாமி ஆகி யோர் உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக் கானோர் பங்கேற்று கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.  இதேபோல், பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு  பிஎஸ்என்எல் எமளாயீஸ் ஊழியர் சங்கம், அதிகாரிகள் சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் எ.சாகுல் அமீது தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் பி.தங்கமணி போராட்டத்தை விளக்கி பேசினார். இதில் எம்.பாப்பாத்தி, சசிதரன், எஸ்.மனோகரன், ராமச்சந்திரன், சி.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உதகை
உதகை பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கம், எஸ்என்இஏ மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப் பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் எஸ்.அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். எஸ்என் இஏ மாவட்ட செயலாளர் கே.வி.கணேஷன் துவக்கி வைத்து பேசி னார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எல்.கிறிஸ் டோப்பர், துனை செயலாளர் டி. விஜயகுமார் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். ஒப்பந்த  ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பி.விஜயகுமரன் நன்றி கூறினார்.  இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.