திருப்பூர், பிப். 7 - திருப்பூரில் பின்னலாடை உற் பத்தி நிறுவனத்தில் நேரிட்ட தீ விபத்து ஏழு மணி நேரப் போராட் டத்திற்குப் பிறகு அணைக்கப்பட் டது. இதில் பனியன் நிறுவன இயந்திரங்கள், பர்னிச்சர்கள், பின்னலாடைத் துணிகள் உள்பட பல கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டது. திருப்பூர், பாரப்பாளையம், ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பால்மணி (52). இவர் மங்கலம் சாலை பூச்சக்காடு 2ஆவது வீதி யில் தரைத்தளத்துடன் கூடிய 4 அடுக்கு மாடி கட்டிடத்தில் பின்னலாடை உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு 1 மணி வரை ஊழியர் கள் நிறுவனத்தில் வேலை செய்த தாகத் தெரிகிறது. வேலை முடித்து அனைவரும் செல்லும் போது, பின்னலாடை உற்பத்தி நிறுவ னத்தில் முதல் தளத்தில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. ஓடிச் சென்று பார்த்தபோது ஒரு பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக உரிமையாளருக்கு தகவல் தெரி வித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ வேகமாக நிறுவ னத்தின் மேல் தளங்களுக்கும் பரவியது.
தீயணைப்புத் துறையி னருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 2 மணியளவில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தெற்குத் தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் தீய ணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட னர். சிறிது நேரத்தில் திருப்பூர் வடக்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய தீயணைப்பு நிலையங் களில் இருந்தும் வாகனங்கள் வர வழைக்கப்பட்டு, மொத்தம் 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மத்திய காவல் நிலைய போலீ சார் தீயணைப்புத் துறையினருக்கு உதவியாக பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தை மாவட்டத் தீயணைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி பார்வையிட் டார். 30 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வியாழக்கிழமை காலை முற்றிலுமாக தீ அணைக்கப் பட்டது. இருப்பினும் தீ விபத் தில் தரைத்தளம் தவிர்த்து, 3 மேல்தளங்களிலும் இருந்த உற்பத்தி செய்யப்பட்ட பின்ன லாடைகள், பின்னலாடை உற் பத்திக்கான துணிகள், உற்பத்தி இயந்திரங்கள், டேபிள், சேர் உட்பட கோடிக்கணக்கிலான மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசமடைந்தது என காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. மின்கசிவுக் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம். எனினும் இந்த விபத்து பற்றி முழுமையான விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது என் றும் காவல் துறையினர் தெரிவித் தனர்.