tamilnadu

img

கோவையில் கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கோவை, ஜூன் 29- கோவையிலிருந்து கேரளா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் விபத்தில் சிக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. கோவை, குனியமுத்தூர் பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  12 பேர் சனியன்று ஆம்னி  வேன் மூலம் பாலக்காட்டி லுள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த ஆம்னி வேனை கரும்புக் கடையைச் சேர்ந்த முகம்மது ஷாஜகான் என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த வாகனம் வாளையாரைத் தாண்டிச் செல்லும்பொழுது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் ஷாஜஹான் மற் றும் வேனில் பயணம் செய்த பைரோஸ் பேகம், குழந்தைகளான ஆலுவா ஷூஃபியா, ஷெரின், ரியான் ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 7 பேரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வாளையாறு காவல்துறையினர் 5 பேரின் உடல்களை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கண்டெய்னர் லாரியை நிறுத்தி வைத்திருந்த ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.