சீன பாதுகாப்பு அமைச்சகம் உறுதி
பெய்ஜிங்,மே 29- எல்லைப் பகுதியில் அமைதியை பேண சீனா எல்லைப் படைகள் உறுதி பூண்டுள்ளன என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா எல்லையில் நிலைமை “நிலையானது மற்றும் கட்டுப் படுத்தக்கூடியது” என்றும் நிறு வப்பட்ட தகவல் தொடர்பு வழிமுறை கள் மூலம் நிலைமையைத் தீர்ப்ப தற்கு இரு நாடுகளும் தயாராக உள்ளன என்றும் சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனா பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மூத்த கேனல் ரென் குய்கியாங் கூறியதாவது: சீனா-இந்தியா எல்லையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எல்லைப் பகுதிகளில் அமைதியை பேணுவதற்கு சீனா எல்லைப் படைகள் உறுதிபூண்டுள்ளன. தற்போது, சீனா-இந்தியா எல்லைப் பகுதிகளின் நிலைமை நிலையானது மற்றும் ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்தக்கூடியது. இரு தரப்பினரும் நிறுவப்பட்ட எல்லை தொடர்பான வழிமுறைகள் மற்றும் தூதரக தொடர்புகள் மூலம் பிரச்சனைகளைத் தொடர்புகொண்டு தீர்க்கும் திறனைக் கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.