கொச்சி, ஜூலை 16- கோவிட் அச்சுறுத்தலின் பின்னணியில் அன்றாட தேவைக்கான பொருட்களை ஆன் லைனில் விநியோகிக்க கேரள அரசின் சப்ளைகோ முடிவு செய்துள்ளது. புதனன்று காணொலி மூலம் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் முதல் ஆன்லைன் விநியோகம் விரிவுபடுத்தப் படுகிறது. இதில் வெளிநாடுகளில் இருந்து கேரளம் திரும்பியோருக்கான ‘பிறவாசி கடைகளும்’ திறக்கப்படும். ஆன்லைன் திட்டம் எர்ணாகுளம் நகரில் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதில் வீடுகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான செலவு வசூ லிக்கப்படும். செயலிகளை பயன்படுத்தி இத்திட்டம் செயல்படுகிறது. மாநிலத்திற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு சப்ளைக்கோ தயாரிப்புகளை விற்க பிறவாசி கடைகள் அமைக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் அல்லது அவர்களின் குழுக்கள் கடையை நடத்தலாம். சப்ளைகோ தயாரிப்புகளின் 10 சதவிகிதம் விலை குறைத்து அவர்களுக்கு வழங்கப்படும். சப்ளைகோவின் இத்தகைய கடைகள் 5 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் அனுமதிக் கப்படும். கேரள வங்கி மூலம் பொருளாதார உதவியும் கிடைக்கும். வியாபார குறியீடு கொண்ட (பிராண்டட்) தயாரிப்புகளை சப்ளைகோ விற்பனை நிலை யங்களுக்கு விநியோகிக்க ஆகஸ்ட் முதல் பரிமாற்றக் கட்டணமாக ரூ.2000 வீதம் வசூ லிக்கப்படும். இந்த வகையில் ரூ.400 கோடி வருவாய் கிடைக்கும் என சப்ளைகோ எதிர் பார்க்கிறது. சப்ளைகோ-யின் அனைத்து தேவைகளையும் ஈடுசெய்யும் ஒரே மென் பொருளான இஆர்பி சொல்யூஷன் பயன் பாட்டுக்கு ரூ.3.56 கோடி செலவாகும்.
கோப்பு கள் பரிமாற்றங்களுக்கான காலதாமதத்தை தவிர்க்க மின்னணு ஆவண தொகுப்புக்கு மாற்றப்படும். இதற்காக ரூ.1.9 கோடி செலவாகும். காணொலி கூட்டத்திற்கு சப்ளைகோ தலைமை நிர்வாக இயக்குநர் பி.அசோக் தலைமை வகித்தார். உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் பி.வேணு கோபால், இயக்குநர் ஹரிதா வி.குமார், கல்வித்துறை இயக்குநர் ஜீவன் பாபு, சட்டத்துறை கூடுதல் செயலர் என்.ஷோபா நாயர், நிதித்துறை கூடுதல் செயலர் எஸ்.வி.கலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.