tamilnadu

img

கேரள காவல்துறையை மனம் திறந்து பாராட்டும் மக்கள்

திருவனந்தபுரம்: 
கொரோனா பரவலால் கேரளம் மாநிலத்தில் ஊரங்கு அமலில் உள்ளது. இந்தத் தருணத்தில் "காவல்துறை மக்களின் நண்பன்" என்பதை நிரூபிப்பதாக சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.கேரளம் இடுக்கி மாவட்டம் அடிமாலியில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோசம்மா. இவர் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இவருக்கு ஆக்ஜிசன் சிலிண்டர் இல்லாமல் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் அடிமாலி காவல்துறையின் உதவியை நாடியுள்ளார். இதையடுத்து அவர்கள் ஆக்ஜிசன் சிலிண்டரோடு சில அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியுள்ளனர். இதனால் மனம் நெகிழ்ந்தார்.

மற்றொரு சம்பவம்....
ஏப்ரல் 25-ஆம் தேதி இரவு, கத்தார் நாட்டைச் சேர்ந்த 11 வயது  சிறுமி லெனா கைபங்கலம் காவல்துறையினரை அழைத்து ஒரு விசித்திரமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அவரது பாட்டிக்கு (ஜான்சி) 60 வயதானதைத் தொடர்ந்து அவருக்கு கேக் வழங்க வேண்டும்.  பாட்டிக்கு கேக்வழங்குவீர்களா? நாங்கள் கத்தாரில் உள்ளோம் எங்களால் வரமுடியாது உதவி செய்வீர்களா? போலீஸ் மாமா என்று கேட்டுள்ளார். செய்வதாக உறுதியளித்த காவல்துறையினர், லெனா பாட்டியின் பிறந்ததினத்தன்று காலை அவரது வீட்டிற்குச் சென்று கேக் வழங்கியுள்ளனர். இதைப் பாரத்து ஜான்சியும் அவரது கணவரும் அதிர்சியடைந்துள்ளனர். பின்னர் காவலர்கள் சம்பவத்தை விளக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். காவலர்களும் பாட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர்.  தொடர்ந்து நிகழ்வை காவல்துறையினர் வீடியோ மூலம் லென்னாவுக்கு காட்டியுள்ளனர். இதைப் பார்த்து லென்னா மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்தது.

பாம்பு பிடிக்க உதவிய காவல்துறை
வெளிநாட்டிலிருந்து தொடர்பு கொண்ட மற்றொரு தம்பதியினர் தமது பெற்றோர் திருவனந்தபுரத்தில் வசிப்பதாகவும் வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டதாகவும் பாம்பை விரட்ட அவர்கள் அச்சப்படுவதாகவும் கூறியுள்ளனர். உடனடியாக  சம்பந்தப்பட்டவர்களின் முகவரியைப் பெற்று பாம்பு பிடிப்பவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்து முதியவர்களுக்கு உதவியுள்ளனர். கண்ணூரைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து "மரிமணி தைலம்" (ஆயுர்வேத வலி நிவாரணி) அவசரமாக தேவைப்படுகிறது என காவல்துறையிடம் உதவிகேட்டுள்ளனர்.  அதையும் காவல்துறையினர் வாங்கிக் கொடுத்துள்ளனர். -பிடிஐ, டெக்கான் கிரானிக்கல் இணையதள தகவல்களிலிருந்து