கொல்லம், மே 25- கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர், உத்ரா, (23). இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சூரஜ் (26) என்பவரை திருமணம் செய்தார். ஒரு வயதில் மகன் உள்ளார். பிப்ரவரி மாத இறுதியில் பறக்கோடு பகுதி யில் உள்ள வீட்டில், இரவு கணவனுடன் தூங்கியபோது, உத்ராவை பாம்பு கடித்தது. சிகிச்சைக்கு பின் அஞ்சலில் உள்ள தாய் வீட்டில், உத்ரா ஓய்வெடுத்தார். மே 6-ஆம் தேதி வீட்டு மாடியில் உள்ள குளிர்சாதன அறையில் தங்கி யிருந்த உத்ராவை பாம்பு கடித்ததில் அவர் பலியானார். உத்ரா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர், அஞ்சல் காவல்துறையில் புகார் செய்தனர்.
புகாரில், “தங்கள் மகள் வரதட்ச ணைக்காக அடிக்கடி துன்புறுத்தப்பட்ட தாகவும் திருமணத்தின் போது கொடுத்த சில நகைகள் லாக்கரிலிருந்தது. அதைக் காணவில்லை என்று கூறியுள்ளனர்”. காவல்துறையினர் நடத்திய முதற் கட்ட விசாரணையில், உத்ராவை, அவர் கணவர் சூரஜ் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. சூரஜ், அடூரைச் பாம்பாட்டி சுரேஷிடமிருந்து ரூ.10 ஆயிரம் கொடுத்து நாகப்பாம்பு ஒன்றை வாங்கியுள்ளார். பாம்பை கடிக்கவிட்டு உத்ராவை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள் ளது. சூரஜின் உறவினர்கள் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகீறது. உத்ரா கொலைக்கு, வரதட்சணை பிரச்சனை மட்டும் காரணமா, வேறு காரணம் உள்ளதா என்ற ரீதியிலும் விசாரணை நடத்தப்படுகிறது.
சூரஜ்-க்கு மற்றொரு பெண்ணிடம் தொடர்பிருப்பதாகவும் காவல்துறையினர் கூறினர். இது ஒரு விசித்திரமான வழக்கு. மூன்று பேர் காவலில் உள்ளனர். விசா ரணை நடந்து கொண்டிருப்பதால், இப்போது விவரங்களை வெளியிட முடி யாது என்று கொல்லம் புறநகர் கண்கா ணிப்பாளர் எஸ்.ஹரிஷங்கர் கூறினார். சூரஜின் தந்தை இந்தச் சம்பவம் குறித்து தனக்கு ஏதும் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.