tamilnadu

img

சார்ட்டட் விமானங்களுக்கு கோவிட் சான்று: மத்திய அரசின் நிலைபாடை கோரியது உயர்நீதிமன்றம்

கொச்சி, ஜுன் 20- வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் திரும்பி வரும் சார்ட்டட் (தனியார்) விமானங்கள் கோவிட் பரி சோதனை சான்று பெறுவதை கட்டாயமாக்கிய கேரள அரசின் முடிவில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. கோவிட் பரிசோதனை சான்று கட்டாய மாக்கப்பட்டது நோய் தொற்று பரவுவதை தடுப்ப தற்கே என்பதை கேரள அரசு நீதிமன்றத்திடம் தெரி வித்தது. நோய் தொற்று உள்ளவர்களுக்கும் தொற்று இல்லாதவர்களுக்கும் தனித்தனி விமானங்கள் என்கிற நிலைப்பாடு அதையொட்டியதாகும். மாநி லத்திற்கு இதற்கான அதிகாரம் உள்ளது என்பதை யும் கேரள சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியது. கோவிட் இல்லாதவர்கள் மட்டும் வந்தால்போதும் என்கிற நிலைப்பாடு அரசுக்கு இல்லை. மத்திய அரசின் விதிமுறைகளின்படி சார்ட்டட் விமானங்க ளுக்கு மாநில அரசின் அனுமதி கட்டாயமாகும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு பொருத்தமான முடிவெடுக்கும்.

நோய் உள்ளவர்களையும் இல்லாதவர்களையும் இனம் பிரிக்கும் முடிவு மத்திய அரசின் விதிமுறைகளின் அடிப்படையிலானது எனவும் கேரளம் தெளிவு படுத்தியது.  வந்தேபாரத் மிஷனின் பகுதியாக வரும் 100 வெளிநாடுவாழ் இந்தியர்களில் 1.12 பேருக்கு நோய் தொற்று உள்ளது. நோய் தொற்று உள்ள வர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே ஏற்படும் கலப்பு நோய் பரவலுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். நோய் தணிக்கும் நடவடிக்கையின் பகுதியாகவே தனித்தனி விமானங்கள் தேவை  என்பதையும் அரசு சுட்டிக்காட்டியது. வெளிநாடு களில் வாழ்வோருக்கு பிசிஆர் டெஸ்ட்தான் நடத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. ட்ரூ நெட், ஆன்டிபாடி டெஸ்ட்டுகள் நடத்தினாலும் போது மானது. விமானத்தில் ஏறுவதற்கு 48 மணி நேரத்து க்கு முன்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வழக்கு தொடுத்திருப்பவர் மத்திய அரசின் விதிமுறைகள் குறித்து கேள்வி எழுப்பவில்லை. அதல்லாமல் மாநில அரசின் நடவடிக்கையை எதிர்ப்பது சட்டத்திற்கு உட்பட்டதல்ல எனவும் கேரள அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இருதரப்பு வாதம் வெள்ளியன்று நிறைவடைந்தது. திங்களன்று  மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளது.