கிருஷ்ணகிரி, ஜூலை 13- ஓசூர் சூடு கொண்டப்பள்ளியை சேர்ந்த நந்திஸ் - சுவாதி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆணவப்படு கொலை செய்யப்பட்டனர். இது குறித்த வழக்கு விசாரணை பெங்க ளூரு மாண்டியாவில் நடைபெற்று வரு கிறது. இதற்காக தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், சிபிஎம் கிருஷ்ணகிரி மாவட்டச் செய லாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், நந்தீஸ் சகோதரர் சங்கர், திலக், முன்னணி யின் மாவட்டச் செயலாளர் கிருஷ்ண வேணி, நாகேஷ் பாபு ஆகியோர் வெள்ளிக்கிழமை(ஜூலை 12) காலை மாண்டியாவிற்கு காரில் சென்றனர். பின்னர் அங்கிருந்து மாலை 4 மணிக்கு பெங்களூரு புறப்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் விபத்துக்குள்ளானது. இதில், கிருஷ்ண வேணிக்கு இடது கையில் முறிவு ஏற் பட்டது. ஜெயராமன், நந்திஸ் சகோ தர், திலக் ஆகியோர் பலத்த காயமடை ந்தனர். கே. சாமுவேல்ராஜ், நாகேஷ் ஆகியோருக்கு லேசான காயம் ஏற் பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அனை வரும் வீடு திரும்பினர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.