tamilnadu

img

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டிக்கான இந்திய அணி ஏப்ரல் 15ல் அறிவிப்பு

இந்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15பேர் கொண்ட இந்திய அணி வருகின்ற ஏப்ரல் 15ம் தேதி அறிவிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.


நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கிரிக்கெட் விளையாட்டின் முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற மே மாதம் 30ம் தேதி துவங்கவுள்ளது. கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிக்கும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு நாட்டு அணிகளும் தனது அணியை அறிவிக்க ஏப்ரல் 23யை கடைசி தேதியாக அறிவித்திருந்தது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 15ம் தேதி கூடும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக்குழு உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.


;