அமெரிக்க ராணுவத்திற்கான தொழில்நுட்ப ஒப்பந்தம் மீது நீதிமன்ற இடைக்காலத் தடை விதித்ததை அடுத்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு ரூ.1.20 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் முக்கியமான தகவல்களையும், ரகசியங்களையும் சேமித்து வைப்பதற்கான 71 ஆயிரத்து 120 கோடி ரூபாய் தொழில்நுட்ப ஒப்பந்தத்தைப் பெற மைக்ரோசாஃப்ட் நிறுவனமும், அமேசானும் போட்டியிட்டதில் ஒப்பந்தம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்பின் தலையீட்டின் பேரில் அது வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய அமேசான், ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் தொடர்ந்தது. இந்நிலையில், அமெரிக்க ராணுவத்திற்கான தொழில்நுட்ப ஒப்பந்தம் மீது அந்நாட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் சரிந்து, 5 நிமிடத்தில் சுமார் 1.20 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.