காஞ்சிபுரம் மாவட்டம் பிரிப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டத் தேதி மாற்றம்
செங்கல்பட்டு, ஆக.1- காஞ்சிபுரம் மாவட்டத்தை, இரண்டாக பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவித்தல் தொடர்பாக பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள் தங்களுடைய கருத்து தெரிவிக்கும் கூட்டம் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தி ருந்தார். தற்போது இந்த கூட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட 19 மற்றும் 20 ஆம் தேதியில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள், தன்னார்வல ர்கள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
பள்ளி குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி
சென்னை, ஆக.1 பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு உருவாக்குவதற்காக அறிவியல் ஒலிம்பியாட் அமைப்பு மற்றும் தொழில்துறை கழிவு மேலாண்மை சங்கம் (ஐ.டபிள்யூ.எம்) இணைந்து சென்னை ஐஐடியில் என்விரோ 2019 என்கிற நிகழ்ச்சியை நடத்தியது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாண வர்கள் இந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்க ளுக்கு கார்ட்டூன் வரைதல், சின்னம் வரைதல் மற்றும் நேரலை செய்திவாசிப்பு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது டன் நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஐ.டபிள்யூ.எம்.ஏ தலைவர் கே. பாஸ்கரன் மற்றும் சென்னை ஐ.ஐ.டி வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே. மங்களா சுந்தர் ஆகியோர் துவக்கி வைத்தனர். ரெனால்ட்-நிசான் நிர்வாக இயக்குநர் பிஜூ பாலேந்திரன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ராமசுப்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
வலையில் சிக்கிய மீனவர் பலி
செங்கல்பட், ஆக.1- நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன். இவரின் மகன் அருள்ராஜ் (26). இவர், காரைக்கால் பகுதியில் உள்ள மீனவர்களுடன் மீன்பிடி படகில் கடலில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் உள்ள கடலில் மீன் பிடித்தபோது, கடலில் வீசப்பட்ட வலை பாறையில் சிக்கிகொண்டதாக கூறப்படுகிறது. இதில், வலையின் மற்றொரு பகுதி படகு எயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. வலையின் இழுவிசை அதிகமாக இருந்ததால் வலை இணைக்கப்பட்ட பகுதி உடைந்து அருள்ராஜ் மீது விழுந்துள்ளது. இதில் அவர் பலத்தகாயமடைந்தார். உடனே அருகில் இருந்த மீனவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.