tamilnadu

பயிர் காப்பீட்டில் பல கோடி ரூபாய் ஊழல் விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு,நவ.5-  பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல  கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2018 - 19 ஆம் ஆண்டு மாவட்டம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேர் நெற்பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு பணம் கட்டியுள்ளனர். மாவட்டம் முழுவதுமாக கடுமையான வறட்சியால் முழுமையாக மகசூல் இல்லை. சோழ மண்டலம் காப்பீட்டு நிறுவனத்தினர்தான் விவ சாயிகளிடம் பணம் வசூலித்தார்கள். விவசாயி ஒருவர் ஒரு ஏக்கர் முதல் 20 ஏக்கர் வரை பணம் கட்டி னார். சுமார் 7,500 ஏக்கருக்கு  விவசாயம் பொய்த்துப் போன நிலையில் காப்பீட்டு நிறுவனம்,  புள்ளியல் துறை,  வருவாய்த் துறை, வேளாண்மை துறையினர் கிராமங்களில் அறுவடை மாதிரி செய்தார்கள். எந்த கிராமத்திலும் நெல் விளைச்சல் இல்லை. இந் நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு சுமார் 13 ஆயிரத்து 400 விவசாயி களுக்கு வங்கியில் பணம் செலுத்தியுள்ளனர். நெல் ஏக்கருக்கு ரூ.26,500,  கரும்பு ஏக்கருக்கு ரூ. 60,000 வழங்கப்பட வேண்டும். ஆனால், ஆறாயி ரம் முதல் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே அந்த காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ளது. சில நூறு விவசாயிகளுக்கு மட்டுமே ரூ. 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை காப்பீட்டுப் பணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 8000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பணம் கட்டியும்,  பட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு எண்,  சரியில்லை என்று ஒரு வருடம் கழித்து நிராக ரித்துள்ளதாக சோழ மண்டலம் காப்பீட்டு நிறுவனம் அறிவித்திருக்கி றது. இது விவசாயிகளை ஏமாற்றிய மோசடி செயல். இதன் மூலம் பல நூறு கோடி ரூபாய் இன்சூரன்ஸ் நிறுவனம். விவசாயி களுக்குச் சேர வேண்டிய பணத்தைக்  கொள்ளை யடித்துள்ளது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் காப்பீட்டு நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். கரும்பு, நிலக் கடலைகளுக்கு  இன்சூரன்ஸ் கட்டிய பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. கடந்த இரண்டு வருடமாகப் பயிர் காப்பீடு மூலம் விவசாயிகளை ஐசிஐசிஐ  மற்றும் சோழமண்டலம் நிறுவனங்கள் உள்ளிட்ட தனி யார் காப்பீட்டு  நிறுவனங்கள் ஏமாற்றி வருகிறது. எனவே, அந்த காப்பீட்டு நிறுவனத்தின் மீது மத்திய - மாநில அரசுகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்து ள்ளார்