உளுந்தூர்பேட்டை, ஜூலை21- திருவெண்ணெய்நல்லூர் மின்சார வாரிய அலுவலகத்தில் கம்பியாளராக வேலை செய்பவர் கேசவன். இவர் சில தினங்களுக்கு முன்பு பணி நிமித்தமாக தடுத்தாட்கொண்டூர் கிரா மத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணியில் ஈடு பட்டுக்கொண்டிருந்தபோது காந்தி நகரைச் சேர்ந்த எஸ்.முருகன், அவரது மகன் ராஜா உள்ளிட்ட சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் கேசவனுக்கு கை மூட்டு நழுவியது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த உதவி மின் பொறியாளர் பாக்கியராஜ் திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல் துறையினர் நடவ டிக்கை எடுக்கவில்லை. புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மின் ஊழியர் மத்திய அமைப்பின் கள்ளக்குறிச்சி திட்டத் தலைவர் கே.விஜயகுமார் தலைமையில் செயலாளர் கே.சீனிவாசன், கோட்டத் தலைவர் ஆர்.சங்கர், செயலாளர் ஜி.கண்ணன் உள்ளிட்ட பலர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். உடனடியாக காவல்துறையினர் தலை யிட்டு தாக்கியவர்களை கைது செய்வதாகக் கூறினர். பின்னர் அரைமணி நேரத்தில் முரு கன் என்ற நபரை கைது செய்ததனர். இதை யடுத்து மறியல் போராட்டம் கைவிடப் பட்டது.