உளுந்தூர்பேட்டை. ஜூன் 14- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தியாகி அசோக் நினைவாகவும், உலக குருதிக் கொடையாளர் தினம், சேகுவாரா பிறந்த தினத்தையொட்டியும் எலவனாசூர் கோட்டை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் ஞாயிறன்று (ஜூன் 14) நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றியச் செயலாளர் வி. மார்த்தாண்டன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் எம்.கே. பழனி, செயலாளர் வே.ஏழுமலை, மாநிலக் குழு உறுப்பினர் செல்வராசு, துணைச் செய லாளர் மு.சிவக்குமார், ஒன்றியத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், பொருளாளர் கே.சங்கர் உள்ளிட்டோர் ரத்ததான முகாமின் நோக்கம் குறித்து பேசினர். சிபிஎம் உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர் ஆர்.சீனுவாசன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.ரகுராமன், விஜய் ரசிகர் மன்ற ஒன்றியச் செயலாளர் விஜய்செல்வா உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனை ரத்த வங்கி மருத்துவர் பிரதீபா, எலவ னாசூர்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ராஜேஷ், வசந்தபிரியன், செவி லியர் ஜமுனா உள்ளிட்டோர் கொரோனா காலத்தில் ரத்த பற்றாக்குறை நிலவும் நிலை யில் தொடர்ந்து ரத்த தானம் செய்து வரும் வாலிபர் சங்கத்தினரை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.