கள்ளக்குறிச்சி, ஜூலை 30- காவல் உதவி ஆய்வாளரை எதிர்த்து பேசினார்கள் என்பதற்காக கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக் கப்பட்ட தலித் இளைஞர்களுக்கு நியாயம் கிடைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டதன் விளைவாக 12 வாரங்களுக்குள் கள்ளக் குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி விசா ரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 16ஆம் தேதி அன்று புதுஉச்சி மேடு கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் ஜோதி பாசு, கண்ணதாசன் ஆகிய இருவரையும் வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாகன சோதனை என்ற பெயரில் அடித்து தகராறு செய்துள்ளார். இதை எதிர்த்து கேட்டனர் என்பதற்காக ஜனவரி 17 நள்ளிர வில் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் வரஞ்ச ரம் உதவி ஆய்வாளர் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தலித் காலனிக்குள் புகுந்து வீட்டில் இருந்த இருவரையும் அடித்து இழுத்து வந்து வாக னத்தில் ஏற்றி, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து 12 மணி நேரம் பல்வேறு வகையான கொடும் சித்திரவதைகளை செய்தனர். மேலும் பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பல இயக்கங்கள் நடத்தியும் உரிய நடவடிக்கை இல்லாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் கடந்த 27ஆம் தேதி யன்று “அடுத்த 12 வாரங்களுக்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இச்சம்பவம் குறித்து நேரடி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.