கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 570 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு புதனன்று வழங்கினார். இதில் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணை யத்தின் தலைவர் ஏ.எஸ்.ஏ.ராஜசேகர், முன்னாள் நகரமன்றத் தலைவர் சி.பாலகிருஷ்ணன், தலைமையாசிரியர், நகரச் செயலாளர் பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதேபோல் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் 384 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை அ.பிரபு வழங்கினார்.