tamilnadu

img

ரூ. 50 ஆயிரம் நிதி வழங்கிய  சிஐடியு குடும்பம்

கரூர்:
கரூர் மாவட்டம் புகளூரில் செயல்பட்டு வருகின்ற காகித ஆலையில் பணியாற்றி வந்த தோழர் ராஜசேகரன் சமீபத்தில் காலமானார். அவர் சிஐடியு மற்றும் கட்சி பணிகளில் அயராது தன்னை இணைத்துக் கொண்டு கட்சி, சிஐடியு வளர்ச்சிக்கு கரூர் ஒன்றியம், வேலாயுதம்பாளை யம், நொய்யல் ஆகிய பகுதிகளில் மிகவும் உறுதியாக பணியாற்றியவர். காவேரி கலைக்குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டார். 
அவரது நினைவாக அவரது குடும்பத்தினர் சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ. 50 ஆயிரம் வழங்கியுள்ளனர்.

கரூரில் நடைபெற்ற சிஐடியு மாவட்ட மாநாட்டில் மாநில  துணை தலைவர் எஸ்.ஆறுமுகம்,  மாநில செயலாளர் கே.தங்க மோகன் ஆகியோரிடம் தோழர் ராஜ சேகரன் மனைவி கிருஷ்ணவேணி மற்றும்  குடும்பத்தினர் நிதி வழங்கினர்.  மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, சிஐடியு சங்க  மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.மாநாட்டில் கலந்து கொண்ட  பிரதிநிதிகளின்  உணர்வுப்பூர்வமான கோஷங்களுக்கு இடையே சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதி வழங்கிய  தோழர் ராஜசேகரனின்  குடும்பத்தினருக்கு மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம் சால்வை அணிவித்து கௌரவித்ததோடு,  மாநிலக் குழு சார்பாக நன்றியை தெரிவித்தார்.